Tuesday, July 3, 2012

மருதாணி போடல்

மருதாணி போடல் :

முன்னைய காலத்தில் மருதாணி கைகளுக்கு போடும் வழக்கம் இருந்தது . அதைத்தான் இப்போது சிலர் பச்சை குத்துதல் என்று சொல்கிறார்கள் .


கல்யாணம் ஆகப்போகும் பெண்ணுக்கு கல்யாணத்துக்கு முதல் நாள் இந்த மருதாணி போடுவார்கள் . இதை இப்போது மெஹந்தி போடல் என்று கூறுவார்கள் . முதல் நாள் போட்டால் தான் கல்யாண நாள் அன்று பளபளப்பு ஆகவும், அழகாகவும் இருக்கும் என்பதற்க்கு ஆகவே அப்படி செய்கிறார்கள் .

எங்களுக்கு ஏதாவது ஒரு டிசைனில் ஏதாவது வரைய தெரியுமாக இருந்தால் அந்த டிசைனை போல நாமே போடலாம் . கடைகளில் இப்போது ஒரு கோன் வடிவில் ஒரு பக் போல் கிடைக்கிறது . அதை வாங்கி எங்களுக்கு தேவையான டிசைனில் நாமே கைகள் , கால்களுக்கு போட்டு அழகு படுத்தலாம் .

எங்களுக்கு நாங்களே போடுவதை விட இன்னொருவர் போட்டால் இன்னும் நல்லம் என்று சொல்கிறார்கள் . இயற்கையானது . கலப்படம் இல்லாதது இந்த மருதாணி .

பாருங்கள் எப்படி எல்லாம் மெஹந்தி போடுகிறார்கள் என்று ...............அழகாக இருக்கின்றது அல்லவா ? விரும்பியோர் நீங்களும் மருதாணி போட்டு ஒரு தடவை பாருங்களேன் .

No comments: