Monday, July 16, 2012

வாழை நாரை எளிதாக பிரித்தெடுக்க புது முறை

வாழை நாரை எளிதாக பிரித்தெடுக்க புது முறை :
======================================

அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (Council of Scientific and Industrial Research – CSIR) வாழையில் இருந்து நார் பிரித்து எடுக்க எளிய முறையை கண்டு பிடுத்து உள்ளனர்.

பொதுவாக, வாழையில் இருந்து நாரை பிரித்து எடுக்க நேரமும் முயற்சியும் அதிகம் வேண்டும். வேலை செய்ய ஆட்களும் தேவை. பொதுவாக, ஒரு நபரால், ஒரு மணியில் 500 கிராம் நார் மட்டுமே எடுக்க புடியும்

இந்த புது முறையால், இதை போன்று பாத்து மடங்கு நார் எடுக்க முடியும்.

இந்த முறையில், காற்றிலா செயல்முறை (anaerobic process) என்சைம் (enzyme) பயன் படுத்தி ஒரு வாரத்தில் நிறைய நாரை பிரித்து எடுக்க முடியும்.

மிச்சம் உள்ள நீரும் கழிவும் பயோ காஸ் ஆக மாற்ற படுகிறது. நீரும் மறுசுழற்சி செய்ய படுகிறது.

இந்த முறையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள 04712515388 என்ற தொலை பேசியை அணுகவும்

நன்றி: ஹிந்து

No comments: