Saturday, July 28, 2012

செல்போன் கோபுரங்களில்................!

இரண்டாம் உலகபோரின்போது அதிகஅளவில் ரேடாரின்முலம் தகவல் பரிமாற்றம் நடந்தது
அப்போது ரேடார்ஆன்டனாவின்மீது பல பறவைகள் தாறுமாறான வேகத்தில் மோதி இறந்து வீழ்ந்தன ரேடார்கள் இயங்காதபோது பறவைகள் ஆன்டனாவில் மோதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது
இறந்த பறவைகள் கருகிபோய்இருந்தன அவை மைக்ரோவேவ் அடுப்பினுள் வைத்து கருக்கியதற்கு ஒப்பாக இருந்தன

இதற்கு காரணம் என்ன

பறவைகள் புவியில் உள்ள மிக்குறைந்த அளவுள்ள காந்த புலத்தினை பயன்படுத்தி தம் இருப்பிடத்தையும் தாம் பறக்கவேண்டிய திசையையும் அறிந்துகொள்கின்றன

ஆன்டனா மற்றும் செல்போன் கோபுரங்களில் வெளிப்படும் சக்திவாய்ந்த மின்காந்த கதிர்வீச்சுக்கள் பறவைகளை கடுமையான குழப்பத்தில் ஆழ்த்துகின்றன

மின்காந்த அலைகள் பறவைகளை மட்டுமல்ல மனிதனை இரண்டுவகையில் பாதிக்கிறது

1,மின்காந்த அலைகளின் ஆற்றல் மனிதஉடல்தசைகளின் வெப்பத்தை அதிகரிக்கச்செய்கிறது இதனால் உணர்வுமிக்க மூளை போன்ற உறுப்புகளின் வெப்பநிலை மிக்குறைந்த அளவு உயர்ந்தாலும் மூளையின் செயல்பாடுகளில் மாற்றம் அதிகஅளவில் ஏற்படுகிறது

2,மின்காந்த அலையில் உள்ள மின்காந்தபுலங்கள் நம் உடலின் முக்கிய உறுப்புகளான மூளை மற்றும் இதயத்தில் உள்ள மிகசிறிய அளவு மின் இயக்கத்தை அதிகஅளவு பாதிக்கச்செய்கின்றன

பாதுகாப்பு காரணங்களுக்காக செல்போன் கோபுரங்களில் வெளிப்படுத்தப்படும் கதிர்வீச்சின் அளவை கட்டுப்படுத்த சர்வதேச தொலைத்தொடர்பு ஆணையம் ஒரு வரைமுறையை வகுத்த்து என்றாலும் ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு விதமான கோட்பாட்டை கடைபிடிக்கின்றன

ஆஸ்திரியா 0.001 வாட்ஸ்/சதுரமீட்டர்

ஸ்விட்சர்லாந்து 0.095 வாட்ஸ்/சதுரமீட்டர்

நியுசிலாந்து 0.5 வாட்ஸ்/சதுரமீட்டர்

பெல்ஜியம் 1.2 வாட்ஸ்/சதுரமீட்டர்

ஆஸ்திரேலியா 2 வாட்ஸ்/சதுரமீட்டர்

கனடா 3 வாட்ஸ்/சதுரமீட்டர்

இந்தியா 9.2 வாட்ஸ்/சதுரமீட்டர்

நம்ம அரசுக்கு நம்ம மக்கள்மேல எவ்ளோ அக்கறை பார்த்தீங்களா
செல்போன் கோபுரங்களை சுற்றி 50 மீட்டருக்குள் குடியிருப்புகள் இருக்க்கூடாது என்பது விதியாம்

தலைவிதி

நன்றி : கலைக்கதிரில் (பேரா. கண்ணன் பேரா.செவ்வேல்

No comments: