Sunday, December 30, 2012

கொய்யாவின் மருத்துவக் குணங்கள்

image
பழங்களிலேயே விலை குறைவானதும், அனைவராலும் எளிதில் வாங்கி உண்ணக் கூடியதுமான கொய்யாப் பழத்தில் முக்கிய உயிர் சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன.கொய்யாமரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டுள்ளது.
* வைட்டமின் . பி மற்றும் வைட்டமின் . சி ஆகிய உயிர்ச்சத்துக்கள் கொய்யாப்பழத்தில் அடங்கியுள்ளன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு போன்ற தாது உப்புக்களும் இதில் காணப்படுகின்றன.
* கொய்யாமரத்தின் இலைகள் திசுக்களை சுருக்கும் மற்றும் குருதிப்போக்கினைத் தடுக்கும் திறன் உடையவை, மலச்சிக்கல் போக்கும். கசாயம் வாந்தியினை தடுக்கும். ஈறுகளில் வீக்கம் ஏற்பட்டால் இலையை காய்ச்சி கொப்பளிக்கலாம்.
* கொய்யா இலைகள் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் இருமல் தொண்டை மற்றும் இதய சம்பந்தமான நோய்களுக்கு தீர்வு தருகின்றன. கொய்யா மரத்தின் இளம் புதுக்கிளைகளின் மூலம் தயாரிக்கப்படும் கஷாயம் காய்ச்சலைக் கட்டுப்படுத்தும்.
* கொய்யா மரத்தின் இலைகளை அரைத்து காயம் புண் இவற்றின் மேல் தடவினால் அவை விரைவில் ஆறிவிடும் கொய்யா இலைகள் அல்சர் மற்றும் பல் வலிக்கும் உதவுகின்றன.
* கொய்யாமரத்தின் பட்டை பாக்டீரியா அழுகலை தடுக்கும். காய்ச்சலைப் போக்கும். வேர்பட்டை குழந்தைகளின் வயிற்றுப்போக்கினை குணப்படுத்தும். கொய்யாப்பழத்தை அறிந்து சாப்பிடுவதை விட பழத்தை நன்றாக கழுவிய பிறகு பற்களில் நன்றாக மென்று தின்பதே நல்லது. இதனால் பற்களும், ஈறுகளும் பலப்படும்.
* வேறு எந்தப் பழத்திலும் இல்லாத வைட்டமின் சி என்ற உயிர்ச்சத்து இப்பழத்தில் அதிக அளவில் காணப்படுகிறது. அதனால் வளரும் குழந்தைகளுக்கு கொய்யாப்பழம் ஒரு வரப்பிரசாதமாகும். உடல் நன்கு வளரவும், எலும்புகள் பலம் பெறவும் கொய்யாப்பழம் உதவும்.
* கொய்யாவின் தோலில் தான் அதிகசத்துக்கள் உள்ளன. இதனால் தோலை நீக்கி சாப்பிடக்கூடாது. முகத்திற்கு பொலிவையும், அழகையும் தருகிறது. தோல் வறட்சியை நீக்குகிறது. முதுமை தோற்றத்தை குறைத்து இளமையானவராக மாற்றுகிறது.
* மது போதைக்கு அடிமையான மது பிரியர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட நினைத்தால் இப்பழத்தை அதிகம் சாப்பிடலாம். இதை தொடர்ந்து சாப்பிட்டால் மது அருந்தும் ஆசை, வெறி எல்லாம் தூள் தூளாகி விடும். மிக எளிதில் மது போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெறலாம்.
* கொய்யா மரத்தின் சில பகுதிகளுடன் வேறு சில பொருட்களும் சேர்த்து தயாரிக்கப்படும் ஒரு கஷாயத்தை அருந்தினால் பிரசவத்திற்கு பின்பு வெளியாகும் கழிவுகளை வெளியேற்ற மிகவும் உதவுவதாக சித்த மருத்துவத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* சாப்பிடுவதற்கு முன் இப்பழத்தை சாப்பிடுவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்போ, அல்லது சாப்பிடுவதற்கு நீண்ட நேரத்திற்கு முன்போ, சாப்பிட நல்லது.
* நோயால் அவதியுற்று மருந்து சாப்பிட்டு வருபவர்கள் இப்பழத்தை சாப்பிட்டால் மருந்து முறிவு ஏற்படும். இருமல் இருக்கும் போது இப்பழத்தை சாப்பிட்டால் அதிகமாகும். தோல் தொடர்பான வியாதி உள்ளவர்கள் இப்பழத்தை உண்டால் நோய் அதிகரிக்கும்.
* கொய்யாப்பழத்திற்கு மருந்தை முறிக்கும் ஆற்றல் உண்டு. ஒரு சிலருக்கு மயக்கத்தை ஏற்படுத்தும். வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் இப்பழத்தை சாப்பிடக்கூடாது.
* கொய்யாப்பழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. சாப்பிட்டால் வயிறு வலி உண்டாகும். கொய்யாவை அளவுடன் சாப்பிடவேண்டும். அளவிற்கதிகமாக சாப்பிட்டால் பித்தம் அதிகரித்து வாந்தி மயக்கம் ஏற்படும்.

புற்றுநோயை தடுக்கும் புராக்கோலி…!

புராக்கோலி

என்ற மேலைநாட்டு காய்கறியானது இதயநோய் மற்றும் புற்றுநோய்களை குணப்படுத்தும் என்று ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நார்விக்கில் உள்ள உணவு ஆராய்ச்சி மற்றும் ஜான் இன்ஸ் மையத்தினர் இதுதொடர்பான ஆய்வில் ஈடுபட்டு சூப்பர் புராக்கோலியை கண்டறிந்துள்ளனர்.

இங்கிலாந்து போன்ற மேலைநாடுகளில் அதிகமாக விற்பனையாகும் புராக்கோலி, அங்கு மிகவும் விலை மலிவான காய்கறியாகும். முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த ப்ராக்கோலியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம், கால்சியம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகின்றன.

எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு ப்ரூக்கோலி முக்கிய பங்காற்றுகிறது. இதில் உள்ள தாதுஉப்புக்கள் உயர்ரத்த அழுத்தம், மற்றும் புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது. நார்விக்கில் உள்ள உணவு ஆராய்ச்சி மற்றும் ஜான் இன்ஸ் மையத்தினர் ஆய்வு செய்து ஆரோக்கியத்துக்கு ஊக்கமளிக்கும் `குளூக்கோராபேனின்’ என்ற ஊட்டச்சத்தை மும்மடங்கு கொண்டுள்ள புதிய புராக்கோலியை உருவாக்கியுள்ளனர்.

இந்த `குளூக்கோராபேனின்’, இதயநோய் மற்றும் குடல், புராஸ்டேட் புற்றுநோய்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிரான தடுப்பாக அமையும் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இது வழக்கமான புராக்கோலியைப் போலவே இருக்கும்.

ஆனால் இந்த சூப்பர் புராக்கோலி, மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளைக் குறைக்கிறது, புற்றுநோயின் ஆரம்பகட்டத்தில் காணப்படும் கட்டுப்பாடற்ற செல் பிரிதலை நிறுத்துகிறது, நோய்களை எதிர்த்துப் போராடும் `ஆன்டி ஆக்சிடன்ட்களை’ ஊக்குவிக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள்.
இதன்மூலம், நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் காய்கறிகளை மேலும் சத்து நிறைந்ததாக உருவாக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளனர் ஆய்வாளர்கள்.

இதய நோய்களை குணப்படுத்தும் தேன்

இதய நோய்களை குணப்படுத்தும் தேன்
உலகில் எளிதில் கெட்டுப் போகாத மிகவும் சுத்தமான பொருள் எது என்று கேட்டால் அது தேன் தான். எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அது கெட்டுப் போகாது. சுத்தமான தேன் மிகச்சிறந்த இயற்கை மருந்தும் கூட. இதில் ஏராளமான சத்துக்கள் உள்ளன. 5 கிலோ பாலின் சக்தி ஒரு கிலோ தேனில் இருக்கிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
பித்த நீர்ச் சுரப்பு இல்லாதவர்கள் தொடர்ந்து தேன் அருந்தி வந்தால், பித்த நீர் சுரந்து தொண்டை, இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் எளதில் நீங்கி விடும். குழந்தைகளுக்கு உண்டாகும் பல் நோய், இதய நோய் ஆகியவற்றுக்கும் தேன் சிறந்த மருந்தாகும்.
இது தவிர சுவாசக்கோளாறு, வயிற்றுக் கடுப்பு, கிருமி தொற்றுதலால் ஏற்படும் பாதிப்புகள், தாகம், வாந்தி பேதி, தீப்புண், விக்கல், மலச்சிக்கல் போன்றவையும் குணமாகின்றன. இரவில் படுப்பதற்கு முன்பு பாலில் சிறிது தேன் கலந்து குடித்துவிட்டு படுத்தால் நன்றாக தூக்கம் வரும். மறுநாள் நன்றாக பசிக்கவும் செய்யும்.
ஒல்லியான உடல் அமைப்பு கொண்டவர்கள் பாலுடன் தேன் கலந்து சாப்பிடுவது நல்லது. குண்டாக இருப்பவர்களின் உடலில் தேங்கி கிடக்கும் கொழுப்பை கரைக்கும் சக்தியும் தேனுக்கு உள்ளது. நீங்களும் குண்டானவர் என்றால் தொடர்ந்து தேன் சாப்பிட படிப்படியாக ஸ்லிம் ஆக மாறலாம்.

ரம்புட்டான் பழம் சத்து பட்டியல்

பழத்தின் விதையைச் சூழ உட்கொள்ளக் கூடிய சாறு நிறைந்த சதைப்பகுதி காணப்படுவதால் அது மக்களிடையே விரும்பப்படும் பயிராக மாறியுள்ளது. ரம்புட்டான் பழம் மஞ்சள் , சிகப்பு என இரண்டு வகைகளில் உண்டு . முள்கள் போன்று இருக்கும் .
ரம்புட்டான் பழம் சத்து பட்டியல்
உள்ளே தோலை உரித்தால் அதற்குள் சதை பற்றுடன் விதையுடன் இருக்கும் அந்த சதையை சாப்பிட வேண்டும். விதையை எறிய வேண்டும் .இந்த பழங்களில் அதிக மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளது. தற்போது பழங்களை அதிகம் சாப்பிடாமல் இரசாயனம் கலந்த குளிர்பானங்களை விரும்பி அருந்துகின்றனர்.
இவை உடலுக்கு பல தீங்குகளை இழைக்கக்கூடியது. அதனால் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் கொடுக்கும் பழங்களை சாப்பிட்டு வந்தால் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.
பயன்கள் : இப்பழம் பனை நுங்கு போன்று இருக்கும். ரம்புத்தான்  பழங்களின் சர்க்கரை அளவு பழங்களின் சதையின் ஒவ்வொரு 100 கிராமுக்கும் நீர்ச்சத்து - 82.3 கிராம், புரதம் - 0.46 கிராம், கார்போஹைட்ரேட் - 16.02 கிராம், சர்க்கரை - 2.9 கிராம், நார்சத்து - 0.24 கிராம், கால்சியம் - 10.6 மி.கிராம், பாஸ்பரஸ் - 12.9 மி.கிராம், அஸ்கார்பிக் அமிலம் - 30 மி.கிராம் உள்ளது.

Monday, December 24, 2012

உழவன் செழித்தல் உலகம் செழிக்கும்

உழவன் செழித்தல் உலகம் செழிக்கும்

புதினா ஒரு மருத்துவ மூலிகை

புதினா ஒரு மருத்துவ மூலிகை

 
 
புதினா Mentha spicata ஒரு மருத்துவ மூலிகையாகும். இது வயிற்றுவலி, வயிற்றுப் பொருமல், செரியாமை முதலியகறிவேப்பிலை மற்றும் கொத்துமல்லியை
ப் போலவே புதினாவும் உணவுக்கு மணமூட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. புதினாக்கீரை பசியைத் தூண்டும். மணமும் காரச் சுவையும் கொண்டது. அதற்காகவே, பல்வேறு நாடுகளிலும் புதினாக் கீரையை மக்கள் விரும்பி வளர்க்கின்றனர்.

புதினாக் கீரையில் உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான வைட்டமின்களும், தாதுப்பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன. துவையல், சட்னி, பொடி போன்றவை தயாரித்தும் மசால் வடையில் சேர்த்தும், பிரியானி மற்றும் இறைச்சி வகைகளில் சேர்த்தும் புதினாக் கீரை பயன்படுத்தப்படுகிறது.

புதினாக் கீரையைத் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இரத்தம் சுத்தமாகும். வாய் நாற்றம் அகலும். ஜீரண சக்தி அதிகரித்து பசி தூண்டப்படும். மலச்சிக்கலும் நீங்கும். பெண்களின் மாதவிலக்குப் பிரச்னைகள் தீர புதினாக்கீரை உதவுகின்றது. ஆண்மைக் குறைவை நீக்கி முழுமையான இல்லற இன்பத்தை அனுபவிக்கவும் புதினாக் கீரை உதவுகின்றது.

ஊளைச் சதையைக் குறைப்பதற்குப் புதினா சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. வயிற்றுப் புழுக்களை அழிக்க இது உதவுகின்றது. வாய்வுத் தொல்லையை அகற்றுகின்றது. புதினா இலையின் சாற்றை தலைவலிக்குப் பூசலாம். இளைப்பு நோயையும், ஆஸ்துமாவையும் புதினாக் கீரை கட்டுப்படுத்துகின்றது. மஞ்சள் காமாலை, வாதம், வறட்டு இருமல், சோகை, நரம்புத் தளர்ச்சி ஆகியவற்றுக்கும் புதினாக் கீரை சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது. பல் ஈறுகளில் உண்டாகும் நோய்களையும் புதினாக் கீரை குணப்படுத்துகிறது.

புதினாக் கீரையை வீட்டுத் தோட்டத்திலும், தொட்டிகளிலும் எளிதாக வளர்க்கலாம். புதினாக் கீரை வாங்கும்போது இலைகளைப் பயன்படுத்தி விட்டுத் தூர எறியும் தண்டுகளை மண்ணில் ஊன்றி வைத்தால் அவை தளிர்த்துப் புதிய இலைகளைக் கொடுக்கும். வயிற்றுப்போக்கு ஏற்பட்ட சமயம் புதினாக்கீரை துவையலை சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப்போக்கு நிற்கும்.

புதினாக்கீரை கர்ப்பிணிகளின் வாந்தியை நிறுத்த ஒரு கைகண்ட மருந்தாக இருந்து வருகிறது. புதினாக்கீரை பற்களில் ஏற்படும் பல வியாதிகளைக் குணப்படுத்தும். புதினாக்கீரையைக் கொண்டு ஓர் அருமையான பற்பொடி தயார் செய்யலாம். இந்தப் பற்பொடியை உபயோகித்து வந்தால் பல்லீரல் வேக்காடு, பல்லீரலில் இரத்தம் வருதல், பல் சொத்தை, பல் அசைவு இவைகளைக் குணப்படுத்தும். வாயில் ஏற்படும் துர்நாற்றத்தைப் போக்க இந்தப் பற்பொடி நன்கு பயன்படும்.

இந்தப் பற்பொடியை ஒருவர் தினசரி உபயோகித்து வருவாரானால், அவர் ஆயுள்வரை பல் சம்பந்தமான எந்த ஒரு வியாதியினாலும் பீடிக்கப்பட மாட்டார். எவ்வளவு பற்பொடி தேவையோ அந்த அளவிற்கு புதினாக்கீரையைக் கொண்டு வந்து இலைகளை மட்டும் கிள்ளி எடுத்துச் சுத்தம் பார்த்து, அதை வெய்யிலில் நன்றாகக் காய வைக்க வேண்டும்.

சருகுபோல காய்ந்தபின் அதை எடுத்து, உத்தேசமாக அந்த இலை இருக்கும் அளவில் எட்டில் ஒரு பங்கு சோற்று உப்பை அத்துடன் சேர்த்து உரலில் போட்டு நன்றாக இடிக்க வேண்டும். தூளான பின் எடுத்து, மாவு சலிக்கும் சல்லடையில் சலித்து எடுத்து, வாயகன்ற பாட்டிலில் போட்டு வைத்துக்கொள்ள வேண்டும். இதைத் தினசரி உபயோகித்து வந்தால் பற்கள் முத்தைப்போல பிரகாசிக்கும். பல் சம்பந்தமான எல்லா வியாதிகளும் குணமாகும்.

Cntral-pivot irrigated sugar cane field



 SL 1

A central-pivot irrigated sugar cane field producing ethanol for the European market near Makeni, central Sierra Leone.



http://img.weiku.com/photo/5716/571663/product/Center_Pivot_Irrigation_System_201289123350897_s.jpg


Nice...........!!!!!!!!

Why coat apple fruits



Why coat apple fruits:
----------------------------

There are several reasons for coating apples. The main reasons are either for preservation, aesthetic (appearance) or the obvious one of replacing the natural wax.

The apples, naturally have a natural wax coating on their surface. This natural wax coating helps to protect the apple fruit from shriveling and weight loss. However, prior to packaging of the apple fruits, they are washed by scrubbing the surface to remove dirt and chemical residues (if they are not organic). This scrubbing removes approximately 50% of the natural wax coating.

To replace the natural wax coating, processors apply other recommended waxes on the surface of apples. The waxes applied on apples can either be animal wax, vegetable wax or mineral and synthetic wax. After applying wax, the fruits assumes glossy and firm appearance which is considered as an important quality in apples.

The distributors and sellers of apples can apply wax to improve appearance and increase visual freshness. This is very common practice especially in supermarkets.

The most common wax used on apples is a vegetable wax called canauba wax or shellac.


Ways of cleaning waxed apples
---------------------------------------
Obviously, it is a good practice to clean apples before eating. I would suggest cleaning with lukewarm water. Just clean them thoroughly to remove any surface wax. This would also help remove any dirt and chemical residues on the surface.

It is not advisable to use detergents even food grade types on porous fruits like apples.

Vinegar (acetic acid) can also do. Use a paper towel with a bit of vinegar to wipe the fruit before washing. Using vinegar wipes away the wax.

The other obvious way to ensure you do not consume the wax on the surface of apples is to remove the entire peel . This can be done by using either a fruit peeler or a knife. This comes at a cost since many people like the tartness and crispiness of the peel.

What is in Cigarette

Friday, December 21, 2012

Banana trees

Banana trees being cut down and hewn. I used to grow my vegetables anymore. I also do not have to waste money to buy the materials to another plant. Because bananas are plants that can absorb water. If you planted a banana tree that has not been cut or is not dead. Banana should be slightly tilted. less. About 7-8 holes drilled on the (not delve to the core. Because bananas are dead) ... is ideal for growing vegetables to eat with them or not. Then cut a Banana. It can grow to about one model fit. ideas with other pretty well ... it started like this and I really do not it?
Thanks Mr
Radhakrishnan Iyer C

உலகம் அழிய சாத்திய கூறுகள் இல்லை....

உலகம் அழிய சாத்திய கூறுகள் இல்லை....
* சூரிய குடும்ப தாக்குதல் ஒன்றும் இல்லை. அப்படி இருந்தால் முன்னதாக பூமியில் மாறுதல் இருந்திருக்கும்.
* பெரிய அளவிலான விண்கற்கள் பூமியில் தாக்குதல் வாய்ப்பு தற்போது இல்லை. இருந்தால் நாசா விஞ்ஞானிகள் சொல்லி இருப்பார்கள்.
* ஒரு கோல் மற்றொரு கோலுடன் மோதும் வாய்ப்பும் இல்லை. அப்படி இருந்தால் முன்பே அண்டத்திலும், பூமியிலும் மாறுதல்கள் ஏற்பட்டிருக்கும். அதுவும் இல்லை.
* சூரிய கதிர்வீசி அபாயம் ஏற்படும் ஆபத்து இருந்தாலும். முன்னரே பூமியில் மாறுபாடு இருக்கும். அதுவும் இல்லை.
இவை வெறும் புரளி என்பது 100 % உண்மை.
நிம்மதியோடு உறங்குவோம்...
ஆனால் பூமிக்கு அடியில் உள்ள எண்ணெய் வளங்கள், வேதிப்பொருள்கள், உலோகங்கள், தாதுப்பொருல்களை மனிதன் தன் சுயநலத்துக்காக சுரண்டுவதால் நிலநடுக்கம், பெரிய அளவிலான சுனாமி பாதிப்புக்கள் எதிர்காலங்களில் ஏற்படலாம்.
பூமியினை சுரண்டாதீர்கள்...
மரம் வளருங்கள் என இயற்கை சொல்கிறது...
தயவுசெய்து பின்பற்றுங்கள்...

Thursday, December 20, 2012

விவசாயம்

தமிழ்நாட்டிற்க்கு பக்கத்து மாநிலங்கள் நீர் கொடுக்க
தயாராக இல்லை. இஸ்ரேல் நாட்டில் மிகக்குறைவான
நீரை வைத்துக்கொண்டு நிறைவான விவசாயம்
செய்யப்படுகிறதே. அந்த விவசாய முறைகளை நாம் ஏன்
பின் பற்றக்கூடாது? அரசாங்கம் இதற்க்கு ஏன் முன்
முயற்ச்சி எடுப்பது இல்லை? இந்திய விவசாயிதான்
அதிகமாக நீரை விரயம் செய்வதாக சொல்லப்படுகிறதே.
எப்போது நாம் இஸ்ரேல் போல விவசாயம்
செய்யப்போகிறோம

2012 டிசம்பர் 21 : உலகம் அழியப் போகிறதா?

2012 டிசம்பர் 21 : உலகம் அழியப் போகிறதா?

 

நாம் வசித்துவரும் உலகம் என்னும் பூமி வருகின்ற 2012 டிசம்பர் 21 அன்றுடன் அழிந்துவிடப்போவதாக மதவாதிகளைப் பின்பற்றும் சில புவிவான் (புவியியல் மற்றும் வானியல்) விஞ்ஞானியினர் பத்திரிகைச் செய்திகளின் மூலமாகவும், தொலைக்காட்சிச் செய்திகளின் மூலமாகவும் செய்திகளை வெளியிட்டு உலக மக்கள் அனைவரையும் தற்போது அச்சம் அடையச்செய்து வருகின்றனர்.
இது அவ்வப்போது நடைபெற்றுவரும் அச்சுறுத்தல் நிகழ்வுகளின் தொடர்போல் தொடர்ந்து வருகின்ற செய்தி என்றாலும் 20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதித் தொடக்கம் 1990, 1994, 1998, 2000, 2004, 2008 ஆண்டுகளின் போதும் அதற்குப் பின்பும் சில புவிவான் விஞ்ஞானியினர் உலகம் அழிந்துவிடும் என்று மக்களை அச்சுறுத்தி வந்ததுடன் அவர்களின் எண்ணங்களில் தோன்றிய அதற்கான விளக்கங்களையும் வெளியிட்டு வந்திருக்கின்றனர்.
அவர்களின் அறிவிப்பினைப் போன்று விபரீதம் ஏதும் நடைபெறவில்லை என்பதை உலக மக்களும் புரிந்து தெளிவுகொண்டிருக்கும் நிலையில்,
மீண்டும் 2012 டிசம்பர் 21இல் உலகம் அழிந்துவிடப் போவதாக சில புவிவான் விஞ்ஞானியினர் மக்களை அச்சுறுத்தி வருகின்றனர். அவர்கள் சொல்லி வரும் விளக்கங்களில் உலக மக்கள் நம்பும்படியான உறுதியான நம்பகத்தன்மை இல்லை என்பதால் அவர்களின் அச்சுறுத்தலுக்குத் துணை சேர்க்கும் விதமாக பண்டைய வரலாற்றுச் சான்றுகளும் உள்ளன என, மாயன் பழங்குடி இனத்தவர்களின் காலண்டர் அன்றுடன் முடிகிறது என்றும், மேலும் உலகில் தோன்றியுள்ள பல மதங்க ளின் நூல்களிலும், உலகத்தின் அழிவு நெருங்கிவிட் டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது என்று சில மேற்கோள்களைக் காட்டியும் உலக மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
இப்படிப்பட்ட புவிவான் விஞ்ஞானியினர் தாங்களே அனைத்தையும் அறிந்திட்ட அறிவு ஜீவிகள் என்று தங்களைத் தாங்களே மிகைப்படுத் திக் கொள்ளும் விதமாக உண்மை நிலைக்குப் புறம்பான செய்திகளை வெளியிடுவது என்பது கண்டிக்கத்தக்கதாகும்.
அவர்கள் கற்றது கைமண் அளவு, கல்லாதது உலக அளவு என்ற நிலையினதாக இருக்க, இயற்கையின் படைப்பான புவியியல் மற்றும் வானியல் அமைப்பில் இதுநாள் வரை புவிவான் விஞ்ஞானியினர் அறிந்திடாத, அதாவது அவர்களால் கண்டறியப்படாத மிக முக்கிய நிகழ்வுகள் என்னென்ன என்பனவற்றை முதலில் காண்போம்.
1. வான் பொருட்களான சூரியன், சந்திரன், பூமி போன்றவற்றின் இயக்கங்களுக்கு அவைகளின் ஈர்ப்பு விசைகளே காரணம் என்பது சர் அய்சக் நியூட்டனின் ஈர்ப்புவிசை கண்டுபிடிப்பிற்குப் பின்பே உலக மக்கள் அனைவரும் அறிந்திடப் பெற்றனர் என்பதை நாம் அறிவோம். ஆனால், நியூட்டனின் காலம் தொட்டு இதுநாள் வரை ஈர்ப்பு விசையின் மூலம் அதாவது எங்கிருந்து எப்படித் தோன்றுகிறது? என புவிவான் விஞ்ஞானியினரால் கண்டறியப்படவில்லை.
2. ஈர்ப்பு விசையின் இயக்கத்தில் அண்டம் பிரபஞ்சம் என்று சொல்லப்படும் யுனிவர்ஸின் (Universe) மய்யத்திற்கும் நூக்லியஸ் (Nucleus) சூரியன் போன்ற நட்சத்திரங்கள் பூமி போன்ற கோள்கள் சந்திரன் போன்ற துணைக் கோள்களுக்கும் உள்ள பிடிப்பு என்னும் தொடர்புகளுடன் அண்டம் முழுவதும் உள்ள அனைத்து வான் பொருட்களின் ஒட்டுமொத்த சுற்றுச் சுழற்சிக்கான காரணத்தை முறையாகத் தொடர்புப்படுத்தும் தி கிராண்ட் யூனிஃபைடு தியரி (The Grand Unified Theory) அதாவது ஈர்ப்பு விசை என்னும் காந்தவிசைத் தொடர்புகளை முறையாகத் தொடர்புப்படுத்து வதாகும். இதுவும் புவி வான் விஞ்ஞானியினரால் இதுநாள் வரை கண்டறியப்படவில்லை. அதாவது முழுமைப்படுத்தப்படவில்லை.
3. சூரியக் குடும்பத்துக் கோள்களின் சுழற்சித் தளம் என்பது எலிப்ஸ் (Ellipse) என்ற முட்டை வடிவ அமைப்பினைக் கொண்டது என்றும் கோள்கள் அனைத்தும் முட்டை வடிவப் பாதையில் சுற்றி வந்தாலும் சமன்பாடு என்ற நிலையைத்தானே அடைகின்றன என்றே புவிவான் விஞ்ஞானியினர் வரையறை செய்திருக் கின்றனர். இதில் உயிரற்ற சடப்பொருட்களான கோள்கள் தானே சமன்பாடு அடைகின்றன என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லையே! இதற்கான தீர்வும் இதுநாள் வரை கண்டறியப்படவில்லை.

4. பூமியானது பருவ நிலைகளின் மாற்றத்தின்போது ஏற்ற மற்றும் வற்ற என்ற இருவித விசைகளை வெளியிடுகின்றன என்றும், குறிப்பாக மழைக்காலத்தின்போது ஒருவித விசையும், பனிக்காலத்தின்போது ஒருவித விசையும், கோடைக் காலத்தின்போது ஒருவித விசையும் என பருவ காலத்திற்கு ஏற்ற விசைகளைப் பரப்புவதாக புவிவான் விஞ்ஞானியினர் வரையறுத்திருக்கின்றனர்.
உயிரற்ற சடப்பொருளான பூமியானது தன் பருவநிலை மாற்றங்களின் காலம் அறிந்து செயல்படுகிறது என்பதும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாக இல்லையே! வான் பொருட்களின் இயக்கங்களுக்கு ஈர்ப்புவிசை என்ற ஒன்றைத் தவிர வேறு விசை என்பது இல்லாதபோது, ஏற்ற, வற்ற அதாவது தேவைப்படும்போது கூட்டியும் குறைத்தும் விசையைப் பரப்புகிறது என்பதும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லையே! அதற்கான சரியான காரணம் கண்டறிந்து இன்றளவும் விளக்கப்படவில்லை.
5. பொருள் ஒன்று தற்சுழற்சி சுற்று சுற்றிட அதற்கு அச்சு என்ற ஒன்று தேவைப்படுகிறது. ஆனால் வான் பொருட்களான நட்சத்திரங்களும், கோள்களும் அச்சு என்ற ஒன்று இல்லாது அந்தரத்தில் மிதந்தபடி தற்சுழற்றி பெற்று இயங்குகின்றபோது, அவைகள் தற்சுழற்சி பெறுவதும், அந்தரத்தில் மிதப்பதும் எப்படி என்பதற்கான காரணங்கள் இதுநாள் வரை கண்டறிந்து விளக்கப்படவில்லை.
6. கண்ணிற்கும் தொலைநோக்கிகளுக்கும் புலப்படாத ஒரு மர்ம சக்தி, நமது சூரிய மண்டலத்திற்கு அப்பால் அண்ட வெளியிலிருந்து வந்து பூமியின் இயக்கத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருக்கிறது. மனிதர்களுக்கும் இதர உயிர்களுக்கும் நன்மை தரக்கூடிய பலதரப்பட்ட அடிப்படைத் துகள்களுடன் காமா கதிர்வீச்சைக் கொண்டதாகவும் இருக்கிறது என்று வரையறுத்திருக்கும் புவிவான் விஞ்ஞானியினர் அக்கதிர்வீச்சு எங்கிருந்து? எப்படி? உருவாகி வருகின்றது என்பதற்கான சரியான விளக்கங்களும் கொடுக்கவில்லை.
7. இவ்வுலகில் தோன்றியுள்ள எல்லா வகையான உயிருள்ள, உயிரற்ற திண்ம, திரவ, வளிம நிலைகளில் இருக்கும் நிறமுள்ள நிறமற்ற பொருட்களின் தோற்றத்திற்கும் கட்டமைப்பிற்கும் அடிப்படைக் காரணம் என்று சொல்லப்படும் அணு பற்றிய வரையறையில்,
அணுவின் மய்யத்தில் நேர் மின்றேற்றம் கொண்ட புரோட்டான் இருக்க, அப்புரோட்டானுடன் இணைந்த நியூட்ரானையும் சேர்த்து எதிர் மின்னோட்டம் கொண்ட எலக்ட்ரான் சுற்றிவருகிறது என்றே விஞ்ஞானியினர் வரையறுத்திருக்கின்றனர் என்பதெல்லாம் சரியே. ஆனால்,
அதில் எலக்ட்ரான் என்பது எங்கிருந்து தோன்றி வருகிறது என்பதைப் பற்றியும் ஈர்ப்பு விசைக்கான அடிப்படைக் காரணம் எது? என்பதைப் பற்றியும் புவிவான் விஞ்ஞானியினரால் விளக்கங்கள் கொடுக்கப்படவில்லை.
ஆக, மேற்கண்ட 7 மிக முக்கிய தீர்வுகளுக்கு புவிவான் விஞ்ஞானியினரால் விடை கண்டறியப்படாத நிலையில் வருகின்ற 2012 டிசம்பர் 21இல் உலகம் அழிந்துவிடப் போவதைக் கண்டுபிடித்துவிட்டதாக அறிவிப்புகள் செய்து வருவது நகைப்பிற்கு உரியதாகும். எனினும் அப்புவிவான் விஞ்ஞானியினர் எடுத்துரைக்கும் விளக்கங்களையும் அதற்கான மறுப்பின் தெளிவையும் அடுத்தடுத்துக் காண்போம்.
எடுத்துக்காட்டு விளக்கங்களும் மறுப்புகளும்:
1. மாயன் காலண்டரின் முடிவு
காலம் என்ற நேரத்தை நொடிகளாகவும் நிமிடங்களாகவும் பிரித்து நாட்களையும் வருடங்களையும தொகுத்து உலகின் முதல் காலண்டர் என்ற ஒன்றை உருவாக்கியவர்கள் மாயன் பழங்குடி இனத்தவர் ஆவர். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைக்கப்பட்டுள்ள மாயன் காலண்டரின் காலங்கள் வரும் 2012 டிசம்பர் 21 முடிவடைகின்றது. எனவே அன்றுடன் பூமி அழிந்துவிடும் என அச்சுறுத்தி வருகின்றனர்.

தெளிவு: கோடானுகோடி ஆண்டுகளாய் சூரியனைச் சுற்றிவரும் பூமி வானியல் மற்றும் புவியியல் பாதிப்புகளால் அவ்வப்போது மாற்றங்கள் அடைந்து வந்திருப்பினும் சூரியனின் வாழ்நாள் முடியும்வரை பூமியும் நிலைத்திருக்கும் என நாம் நம்பலாம்.
தொலைநோக்கிகள் பல வகை கண்டுபிடிக்கப்பட்ட பின்னரும் இதுநாள் வரை எந்த ஒரு நட்சத்திரமும் எரிந்து முடிந்து ஒளியிழந்துவிட்டதாக பதிவு செய்த அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. குறிப்பாக சமீபத்திய பதிவுகள் எதுவும் இல்லை என்பதால் நாம் அச்சம் அடைந்திடத் தேவையில்லை.
மேலும், மாயன் பழங்குடி இனத்தவரின் காலத்தின் கணக்கீடு பூமியை மய்யமாகக் கொண்டு சூரியன் மற்றும் இதர கோள்கள் சுற்றிவருகின்ற பொய்த் தோற்ற அமைப்பினை அடிப்படையாகக் கொண்டதாகவே அமைந்திருக்கும் என்பதால், அவர்களின் கணக்கு நிச்சயம் தவறாகவே இருக்கும். அதனால் இந்த அச்சுறுத்தலைத் தவிர்த்திடலாம்.
2. சூரியப் புயல்களின் தாக்கம்:

சூரியனிடமிருந்து வெளியேறிவரும் காந்தப் புலன்களுடன் கூடிய வெப்ப ஆற்றல்கள் புயல்களாக அன்றைய தினத்தில் பூமியைத் தாக்கும். அதன் கடுமையால் உலகைச் சுற்றிவரும் செயற்கைக் கோள்களின் செயல்பாடுகள் செயலிழந்து போவதுடன் உலகில் உள்ள அனைத்து மின்சக்தி கேந்திரங்கள் (Power Grids) செயலிழந்து போகும். அதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படுவதுடன் பருவநிலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டு உலகம் முழுவதும் உறைநிலைக்குப் போய் உயிர்களின் அழிவிற்கு வழிவகுக்கும் என அச்சுறுத்தியிருக்கின்றனர்.
தெளிவு: உருவத்தில் பூமியைவிட பன்மடங்கு பெரியதாய் இருக்கும் சூரியனின் ஈர்ப்புவிசை பூமியைப் போன்று 28 மடங்கே ஆகும். மேலும், தன்னைத்தானே 25லு மணி நேரத்தில் கிழக்கிலிருந்து மேற்காக தற்சுழற்சி பெற்றிடும் சூரியனின் சுழற்சி வேகத்தில் சூரியனிலிருந்து புறப்படும் எந்தக் காந்தப் புயல்களும் நேரே 90 டிகிரியில் வந்து பூமியைத் தாக்கப்போவதில்லை.
அப்படி 90 டிகிரியில் (ஓர் இடத்திலிருந்து புறப்பட்ட காந்தப்புயலானது சூரியனின் தற்சுழற்றி வேகத்தின் விளைவால் 120 டிகிரி கோணத்தையே சென்றடைந்திடும் என்பதால், காந்தப்புயலின் வலிமை என்பது குறைந்து மிகப் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது. ஏனெனில், சூரியனை மய்யமாகக் கொண்டு சுற்றிவரும் அதன் கோள்களும் துணைக்கோள்களும் கிடைமட்டம் (படுக்கை வாட்டில்) என்று சொல்லப்படும் 180 டிகிரியில் சுற்றி வரவில்லை.
அவை கிடைமட்டத்திற்கு சற்றே சாய்வான அதாவது தென்புறத்தில் உயர்வு, வடபுறத்தில் தாழ்வு என்ற நிலையில்தான் சுற்றுச்சுழற்சி பெறுகின்றன என்பதற்கான எடுத்துக்காட்டு விளக்கங்களைக் காண்போம்.
பூமிக்கோளின் காந்த துருவங்கள் பூமி உருண்டையின் நேர் வடக்கு தெற்கில் அமைந்திடவில்லை. அவை பூமியின் சாய்வுக்கோணமான 23.5 டிகிரிக்கு நேரே அமைந்திடாமல், அதன் வடபுறத்தில் சற்றே மேற்காகவும், அதன் தென்புறத்தில் சற்று கிழக்காகவும், 17 டிகிரி இடைவெளி என்ற அளவில் பூமிக்கோளின் சுற்றுச்சுழற்சித் தளத்திற்கு நேர்க்குத்தாக அமைந்திருப்பதும் கண்டறியப்பட்டு புவியியல் விஞ்ஞானியினரால் வரையறை செய்யப்பட்டுள்ளது.
பூமியின் நிலையினைப் போன்றே சுக்கிரன் மற்றும் புதன் கோள்களின் காந்த துருவங்கள், அந்தந்தக் கோள்களின் நேர் வடக்கு தெற்கில் அமைந்திடாமல் பூமியின் சாய்வுக் கோணத்தைவிட சற்றே குறைவான இடைவெளியில் அதனதன் சுற்றுச்சுழற்சித் தளத்திற்கு நேர்க்குத்தாக அமைந்திருக்கும்.
அடுத்து சூரியனுக்கும் பூமிக்கும் வெளிப்புறக் கோள்களான செவ்வாய், வியாழன், சனி மற்றும் இதர கோள்களின் காந்த துருவங்கள் அதனதன் நேர் வடக்கு தெற்கில் அமைந்திடாமல், அதிக டிகிரி இடைவெளியில் அதனதன் அதிகத் தொலைவிலான சுற்றுச்சுழற்சித் தளத்திற்கு ஏற்ப நேர்க்குத்தாக அமைந்திருப்பதைக் கொண்டு அறிந்திடப் பெறலாம் என்பதை எந்தப் புவிவான் விஞ்ஞானியினரும் மறுத்திட முடியாது.
இதன் அடிப்படையில் 23.5 டிகிரி சாய்வுக் கோணத்திலான சூரிய மண்டலக் கோள்களின் சுற்றுச்சுழற்சித் தளத்தில் வருகின்ற 2012ஆம் ஆண்டு டிசம்பர் 21அன்று பூமிக்கோளின் இருப்பிட நிலையைக் கவனிக்குமிடத்து, மய்யத்தில் நின்றிருக்கும் சூரியனின் நிலையை 180 டிகிரி கிடைமட்ட அளவினதாகக் கொண்டால், பூமியானது சூரியனுக்கு உயரே சாய்வான தளத்தில் அதன் இருப்பிட எல்லையில் நின்றிருக்கும் என்பதால், சூரியனின் வெப்ப ஆற்றலுடன் கூடிய காந்தப் புயல்கள் பூமியில் பேரழிவை ஏற்படுத்த முடியாது.
மேலும், கூடுதல் விவரமாக ஒவ்வொரு டிசம்பர் 21ஆம் தேதியின்போதும் பூமியின் வடக்குப் பகுதிகளில் உள்ள அனைத்து நாடுகளில் அப்போது கடும் மழை மற்றும் பனிக்காலமாக இருந்திடும் நிலையென்பதால், வளி மண்டலத்தில் நிலவிடும் அதிகப்படியான ஈரப்பதத்தால் சூரியப் புயல்களின் வெப்பம் குறைக்கப்படும் என்பதால், பெரிய அளவிலான பேரழிவை ஏற்படுத்த முடியாது. எனவே, அச்சம் அடைந்திடத் தேவையில்லை.
3. மதவாதிகளின் நம்பிக்கைகள்:
கிறித்துவர்களின் புனித நூலான பைபிளை ஆராய்ந்த மத ஆராய்ச்சியாளர்கள், கடவுளுக்கும் சைத்தானுக்கும் நடக்கும் இறுதிப்போர் (Armageddon) அன்றைய தினத்தில் நடைபெறும் என்கிறார்கள். இதே கருத்தை, பவுத்தர்களின் புனித நூலான அய்.சிங்.லும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், மேலும் இந்து மதத்தின் புனித நூல்களும் கலிகாலத்தின் உச்சம் நெருங்கிவிட்டதாகவும், உலகம் அழிவை நெருங்கிவிட்டதாக மக்களை அச்சுறுத்தி வருகின்றனர்.
தெளிவு: கிறித்துவ மதம் என்பது ஆங்கிலேயர் வாழ் பகுதியிலும், இஸ்லாம் மதம் என்பது அரேபியர் வாழ் பகுதியிலும், இந்து மதமும் பவுத்த மதமும் இந்தியாவில் தோன்றி பரவி வந்திருப்பினும் அந்தந்த மத நூல்கள் அந்தந்த இறைவனால் அருளப்பட்டதாகச் சொல்லப்பட்டிருக்க, வான் பொருட்களான சூரியன், சந்திரன், பூமியைப் படைத்து, பூமியில் மட்டும் பல உயிர்கள் உயிர் வாழ்ந்திடத்தக்க வழி வகைகளைப் படைத்து, ஆறறிவு பெற்ற மனிதர்களைப் படைத்து அனைத்தையும் இயக்கிக் காத்துவரும் தெய்வங்களில் எந்த தெய்வமும் அவைகளின் சரியான இயக்கங்கள் பற்றிய குறிப்புகளைக் கொடுக்கவில்லை.
குறிப்பாக, மக்களின் வாழ்க்கைக்குத் தேவையான நீதிநெறிகளையும் நற்போதனைகளுடன் மனிதர்களால் எளிதில் உணர்ந்திட முடியாத ஆன்மா என்றால் என்ன? அது என்னில் ஓர் அங்கமே என மொழிந்திருப்பதைப் போல் சூரியனை மய்யமாகக் கொண்டு பூமிதான் சுற்றி வருகிறது என்பதைப் பற்றியோ, பூமியின் தற்சுழற்சித் திசையான மேற்கிலிருந்து கிழக்கான சுழற்சியின் கவர்ச்சி விசையால், சந்திரன் இடப்பக்கச் சுற்றாக எதிர்மறையாக பூமியைச் சுற்றிவரும் உண்மை நிலைகள் பற்றிய குறிப்புகளோடு கொடுக்கவில்லை என்பதால் இந்த அச்சுறுத்தலையும் தவிர்த்திடலாம்.
4. மஞ்சள் கல் எரிமலைகள் வெடிப்பு
மஞ்சள் கல் (Yellow Stone) எரிமலைகள் வெடிக்கும்போது எரியும் நெருப்புக் குழம்புகளுடன் வான் வெளியில் வீசியடிக்கப்படும் சாம்பலின் அளவு பூமி முழுவதும் சூழ்ந்துநின்று சுமார் 15,000 ஆண்டுகள் சூரியனை மறைத்திடும். அதனால் பூமியானது வெப்பத்தை இழந்து உறை நிலைக்குப்போய் அழிந்துவிடும் என்றும் ஒவ்வொரு 6,50,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை வெடிக்கும் திறன் கொண்டது. மீண்டும் வெடிக்கப்போவது அந்த 2012 டிசம்பர் 21 அன்றுதான் என புவியியல் விஞ்ஞானியினர் அச்சுறுத்தி வருகின்றனர்.
தெளிவு: தற்போது உலகில் உள்ள நாடுகள் அனைத்தும் எரிபொருளான கச்சா எண்ணெயின் தேவைகளை உணர்ந்து அங்கங்கே பூமியில் துளைகளை இட்டு உறிஞ்சி எடுத்து வருகின்றன. உலக அளவில் எரிபொருட்களின் பற்றாக்குறை தொடர்ந்திருக்கும் நிலையில் தற்போது அங்கங்கே வெடித்துவரும் எரிமலைகளின் சீற்றங்கள் குறைந்த அளவிலான பாதிப்புகளையே ஏற்படுத்தியிருக்கும் நிலையினைக் கவனிக்குமிடத்து மஞ்சள் கல் எரிமலைகள் வெடித்து அதனால் வெளியேறும் சாம்பல்கள் பூமி முழுவதும் சூழ்ந்துநின்று 15,000 ஆண்டுகள் சூரியனை மறைத்திடும் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லையே?
ஆனால், இயற்கையின் நிகழ்வாக அச்சாம்பல்கள் வெகுவிரையில் பூமியில் படிந்து பாதிப்புகள் நீங்கிவிடும் என்பதற்கான விளக்கங்களைக் காண்போம்.
பூமியின் மீதுள்ள பொருட்களைக் கவர்ந்திழுப்பது என்பது பூமியின் ஈர்ப்பு விசையினைக் குறிக்க. பூமிக்கு வெளிப்புறத்தில் வான்வெளியில் சுழன்றுவரும் செயற்கைக் கோள்களையும் துணைக்கோளான சந்திரனையும் கவர்ந்திழுப்பது என்பது பூமியின் ஈர்ப்பு விசையால் ஏற்படும் கவர்ச்சி விசையினைக் குறிக்கும்.
காந்தத்தால் கவர்ந்திழுக்க முடியாத ஒரு பிளாஸ்டிக் பந்தை வானத்தில் வீசி எறிந்தால், அது பூமியில் வந்து விழுவதற்கு பூமியின் கவர்ச்சி விசையே காரணம் என்று புவிவான் விஞ்ஞானியினர் தவறாக வரையறுத்து எழுதி வைத்திட, அந்தத் தவறான வரையறையினைப் படித்து வந்த இன்றைய புவிவான் விஞ்ஞானியினர் அவர்களின் மனதினில் தோன்றியபடி செய்திகள் வெளியிடுவது என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று.
பிளாஸ்டிக் பந்து மற்றும் இறகினை வானத்தில் வீசியெறிந்திடும்போது பிளாஸ்டிக் பந்தானது அதன் எடையின் காரணமாக காற்றை விலக்கிக் கொண்டு முதலில் பூமியில் விழுவதும், இறகானது குறைந்த அளவிலான எடையின் காரணமாக காற்றால் தாங்கப்பட்டு மெதுவாக கீழே விழுகின்ற செயலுக்கு அவற்றின் எடைகளின் வித்தியாசமே காரணம் ஆகும்.
காற்று இல்லாத இடத்தில் சந்திரனில் நின்று கொண்டு நீல் ஆம்ஸ்ட்ராங் செய்துகாட்டிய செய்முறை விளக்கம் ஒன்றினை இங்கே நினைவுகூர்வோம். இரும்புத்துண்டு, இறகு இரண்டையும் ஒரே நேரத்தில் கீழே விழுந்திடும்படி செய்திட்டபோது அவை இரண்டும் ஒரே நேரத்தில் தரையில் வீழ்ந்ததைக் கொண்டு அவற்றின் எடைகளே அதற்குக் காரணம் என்பதை அறிந்திடப் பெறலாம். கூடுதல் விவரமாக, பூமியின் ஈர்ப்பு விசை அளவில் 1/6 பங்கு அளவிலான ஈர்ப்பு விசை சந்திரனில் உண்டு என்பதையும் நினைவிற்கொள்க!
ஆனால் பூமியைப் பொறுத்தமட்டில் வானத்தில் வீசி எறியப்படும் பொருட்கள் கீழே வந்து விழுவதற்கு பூமியின் மீதுள்ள வளிமண்டலத்தின் அழுத்தம் என்பது ஒரு கூடுதல் காரணம் என்பதையும் இங்கு நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதன்படி, அதாவது வளிமண்டலத்தின் அழுத்தம் இருப்பதைக் கருத்தில் கொண்டு கவனிக்குமிடத்து, மஞ்சள் கல் எரிமலைகள் வெடிப்பால் பூமியின் மீது பரப்பி விடப்படும் சாம்பல்கள், காற்றில் உள்ள ஈரப்பதத்தால், குளிர்ந்து, ஈரத்தன்மைக்கு உள்ளாகும் ஒவ்வொரு சாம்பல் துகள்களும் நுண்ணிய எடைக்கு உள்ளாகி, ஒன்றுடன் ஒன்று படிந்து எடை என்பது ஏற ஏற சாம்பலின் படிமங்கள் விரைந்து பூமியில் படிந்திடத் தொடங்கி குறைந்தது 15 நாட்களில் வானம் தெளிந்து பழைய நிலைக்குத் திரும்பிவிடும் என்பதால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை.
5. பூமியின் மீது பயங்கர விபத்து
பெர்க்லி பல்கலைக்கழகத்து புவிவான் விஞ்ஞானியினரின் கணித ஆய்வுகளின்படி பூமிக்குப் பெரிய அளவிலான பயங்கர விபத்து நிகழும் காலம் நெருங்கிவிட்டது என்று அச்சுறுத்தியிருக்கின்றனர்.
தெளிவு: பெர்க்லி பல்கலைக்கழகத்து விஞ்ஞானிகளின் விளக்கங்கள் ஏதும் தரப்படாத யூகங்கள் மாயன் பழங்குடி இனத்து தடைப்பட்ட காலண்டர் கணக்கினைப் போன்று தவிர்க்கப்பட வேண்டிய ஒன்றே!
6. துருவ காந்த சக்திகளின் இடமாற்றம்:
பூமியானது வடக்கு, தெற்கு என இரண்டு காந்த துருவங்களைக் கொண்டது. பூமியைச் சுற்றிலும் சூழ்ந்துள்ள காந்தப் புலன்களே, சூரிய ஒளியின் ஊடாக பூமிக்கு வந்திடும் புற ஊதாக் கதிர்களைத் தடுத்து அனைத்து உயிர்களையும் வாழவைத்துக் கொண்டிருக்கின்றது. பூமியானது தன் துருவங்களை 75,00,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை இடமாற்றம் செய்துகொள்ளும் தன்மை உடையது. மேலும், அந்தக்காலம் முடிந்து 30,000 ஆண்டுகள் தள்ளிப் போய்விட்டது. தற்போது பூமியின் துருவ இருப்பிட எல்லைகள் 20 கி.மீ. முதல் 30 கி.மீ. வரை நகர்ந்து போகின்றன என்றும்,
இப்படி துருவங்கள் இடம் மாறிடும்போது ஏற்படும் காந்தப் புலன்களின் சமச்சீர் இன்மையால் மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்படுவதுடன், சூரியனின் அதிக அளவிலான புற ஊதாக் கதிர்கள் பூமியைத் தாக்கி உலகில் உள்ள அனைத்துவகை உயிரிகளையும், பொருட்களையும் எரித்து அழித்துவிடும். அப்படிப்பட்ட நிகழ்வு நடைபெறப் போவதும் அந்த நாளில்தான் என அச்சுறுத்தி வருகின்றனர்.
தெளிவு: பூமியின் வட துருவம் தென் துருவமாகவும், தென் துருவம் வட துருவமாகவும் தன்னைத் தானே இடம் மாற்றித் திரும்பிட வாய்ப்பே இல்லை. தி கிராண்டு யூனிஃபைடு தியரியைப் பூர்த்தி செய்திடாத புவிவான் விஞ்ஞானியினரின் தவறான அறிக்கைக்கு இதுவே சான்றாகும்.
அப்படி பூமியானது தன் துருவங்களை மாற்றித் திரும்பினால் நம் யுனிவர்ஸின் கட்டமைப்புடன் அதன் இயக்கங்கள் நிலைகுலைந்து, யுனிவர்ஸின் ஒட்டுமொத்த அழிவாகவே அது இருக்கமுடியும். தற்போது அப்படி நடைபெற வாய்ப்பில்லை.
அடுத்து, உயிரற்ற சடப்பொருளான பூமி 75,00,000 ஆண்டுகளுக்கு ஒருமுறை தன் துருவங்களைத் தானே இடம் மாற்றிக்கொள்ளும் என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதாக இல்லையே. இதில் 30,000 ஆண்டுகள் கடந்துவிட்டதாம். இதுவும், தி கிராண்ட் யூனிஃபைடு தியரிக்குப் பொருந்தாத வரையறையாக இருப்பதால், தவறான யூகங்களை நாம் நம்ப வேண்டாம்.
மேலும் பூமியின் துருவ எல்லைகள் ஓர் இடத்திலிருந்து 20 கி.மீ. முதல் 30 கி.மீ. வரை நகர்ந்து போகின்றன என குறிப்பிட்டிருக்கின்றனர். இதுபோல் துருவங்கள் சற்றே நகர்ந்து செல்கின்றன என்பது உண்மையே! ஆனால், அப்படி நகர்ந்து செல்லும் துருவ எல்லைகள் மீண்டும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் பழைய நிலைகளை அடைந்து கோள்கள் சமன்பாடு அடைகின்றன என்ற நிகழ்வைக் கண்டறிந்திடாது விட்டுவிட்டனர். இயற்கையின் நிகழ்வாக காலம் காலமாய் நடைபெற்றுவரும் அந்நிகழ்வுகளைக் கண்டு நாம் அச்சப்படத் தேவையில்லை.
இறுதியாக புவிவான் விஞ்ஞானியினர் உலக மக்களுக்கு விடுத்திருக்கும் அச்சுறுத்தலில் அவர்கள் கவனிக்கத் தவறிய ஒரு முக்கிய அச்சுறுத்தல் நிகழ்வு என்ன என்பதைக் காண்க.
பூமியானது தன் துருவங்களைத் தானே இடம் மாற்றிக்கொள்ளும். அப்போது காந்த துருவங்களின் சமச்சீர் இன்மையால் மக்களின் இயல்புநிலை பாதிக்கப்படுவதுடன், சூரியனின் புற ஊதாக் கதிர்கள் தாக்கி பூமியில் உள்ள அனைத்து உயிரிகளும், பொருட்களும் எரிந்து அழிந்துவிடும் என்பதெல்லாம் சரி. ஆனால்,
பூமியின் வட துருவம் தென்துருவமாகவும், தென் துருவம் வட துருவமாகவும் திரும்பிடும்போது பெரிய அளவிலான பூகம்பத்துடன் பூமியின் நான்கு பங்கில் மூன்று பங்கு அளவு கொண்ட கடல்நீர் பொங்கி பெரிய அளவிலான சுனாமி புரண்டு அடித்து அனைத்தையும் முதலில் அழித்திடாதோ! பின்னர்,
என்ன அறிக்கை வெளியிடுகின்றனர். எந்தவித அச்சுறுத்தலும் முழுமையான விளக்கங்களுடன் சரியான காரணங்களுடனும் கொடுக்கப்படவில்லையே! மேலும், குறிப்பாக புவிவான் விஞ்ஞானியினரால் இன்றளவும் கண்டறியப்படாத, முதல் கொடுக்கப்பட்டுள்ள 7 முக்கிய விவரங்களைக் கண்டறிந்து விளக்கிட முடியாத விஞ்ஞானியினரின் கூற்றை இனியும் எப்படி நம்ப முடியும்.
ஆக, நடப்பு 21ஆம் நூற்றாண்டையும் தாண்டி நம் பூமியானது நூற்றாண்டில் அடுத்த செஞ்சுரியும் அடித்திடும் என நாம் நம்புவோம்.
 
நன்றி- விடுதலை நாளிதழ்

Tuesday, December 11, 2012

நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள்

ஒரு சின்ன குழாயில் நீர் பிடிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். ஆனால், நமது இலக்கியங்களில் சொல்லப்பட்டிருக்கும் நீர் நிலைகள் மொத்தம் 47.

(1) அகழி (Moat) - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண்.
(2) அருவி (Water Falls) - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது.
(3) ஆழிக்கிணறு (Well in Sea-shore) - கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு.

(4) ஆறு (River) - பெருகி ஓடும் நதி.
(5) இலஞ்சி (Reservoir for drinking and other purposes) - பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம்.
(6) உறை கிணறு (Ring Well) - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு.
(7) ஊருணி (Drinking water tank) - மக்கள் பருகும் நீர் நிலை.
(8) ஊற்று (Spring) - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது.
(9) ஏரி (Irrigation Tank) - வேளாண்மை பாசன நீர் தேக்கம்.
(10) ஓடை (Brook) - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர்.
(11) கட்டுங்கிணக் கிணறு (Built-in -well) - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு.
(12) கடல் (Sea) - சமுத்திரம்.
(13) கண்மாய் (கம்மாய்) (Irrigation Tank) - பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர்.
(14) கலிங்கு (Sluice with many Venturis) - ஏரி முதலிய பாசன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.
(15) கால் (Channel) - நீரோடும் வழி.
(16) கால்வாய் (Suppy channel to a tank) - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி.
(17) குட்டம் (Large Pond) - பெருங் குட்டை.
(18) குட்டை (Small Pond) - சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை.
(19) குண்டம் (Small Pool) - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை.
(20) குண்டு (Pool) - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம்.
(21) குமிழி (Rock cut Well) - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு.
(22) குமிழி ஊற்று (Artesian fountain) -அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று.
(23) குளம் (Bathing tank) - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப் பயன்படும் நீர் நிலை.
(24) கூவம் (Abnormal well) - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு.
(25) கூவல் (Hollow) - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம்.
(26) வாளி (stream) - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர் வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.
(27) கேணி (Large Well) - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங்கிணறு.
(28) சிறை (Reservoir) - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை.
(29) சுனை (Mountain Pool) - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை.
(30) சேங்கை (Tank with Duck Weed) - பாசிக்கொடி மண்டிய குளம்.
(31) தடம் (Beautifully Constructed Bathing Tank) - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம்.
(32) தளிக்குளம் (Tank Surrounding a Temple) - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற நீர் நிலை.
(33) தாங்கல் (Irrigation tank) - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும்.
(34) திருக்குளம் (Temple tank) - கோயிலின் அருகே அமைந்த நீராடும் குளம்.
(35) தெப்பக்குளம் (Temple tank with inside pathway along parapet wall) - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம்.
(36) தொடு கிணறு (Dig well) - ஆற்றில் அவ்வப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம்.
(37) நடை கேணி (Large well with steps on one side) - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங்கிணறு.
(38) நீராவி (Bigger tank with center Mantapam) - மைய மண்டபத்துடன் கூடிய பெருங்குளம். ஆவி என்றும் கூறப்படும்.
(39) பிள்ளைக்கிணறு (Well in middle of a tank) - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு.
(40) பொங்கு கிணறு (Well with bubbling spring) - ஊற்றுக்கால் கொப்பளித்துக் கொண்டே இருக்கும் கிணறு.
(41) பொய்கை(Lake) - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை.
(42) மடு (Deep place in a river) - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம்.
(43) மடை (Small sluice with single venturi) - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு.
(44) மதகு (Sluice with many venturis) - பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ள, பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் மடை.
(45) மறு கால் (Surplus water channel) - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால்.
(46) வலயம் (Round tank) - வட்டமாய் அமைந்த குளம்.
(47) வாய்க்கால் (Small water course) - ஏரி முதலிய நீர் நிலைகள்.


நன்றி: தமிழர் வரலாறு ( முகநூல் பதிவு )

Monday, December 10, 2012

கட்டுக் கொடியின் மருத்துவ குணங்கள்

கட்டுக் கொடியின் மருத்துவ குணங்கள் :-

கட்டுக்கொடி ஓர் ஏறு கொடியினம். முனை மழுங்கிய இலைகளுடன் வேலிகளிலும், புதர்களிலும், மானாவாரி, விவசாய நிலங்களிலும் படர்ந்து வளரக்கூடியது. இதில் சிறு கட்டுக்கொடி பெருகட்டுக் கொடி என இரு வகையுண்டு. இரண்டிற்கும் மருத்துவ குணம் ஒன்றே. ஒரே கட்டிலிருந்து பல கொடிகள் உண்டாகும். மண்ணில் பதிந்தால் வேர் விட்டு இன விருத்தியாகும். விதை மூலமும் இன விருத்தி செய்யப்படும்.

மருத்துவப் பயன்கள் :- இது குளிர்ச்சியுட்டாக்கியாகவும் உமிழ்நீர்ப் பெருக்கியாகவும் செயற்படும்.

பாக்களவு இலையை மென்று தின்ன இரத்த பேதி, சீதபேதி, மூலக்கடுப்பு எரிச்சல் தீரும்.

இலை, வேப்பங்கொழுந்து சம அளவு அரைத்துக் காலை மட்டும் கொடுத்து வர நீரிழிவு, களைப்பு, ஆயாசம், தேக எரிவு, அதிதாகம், பகு மூத்திரம் தீரும். சிறுநீர்ச் சர்கரையும் தீரும். சூரணமாக்கியும் சாப்பிடலாம்.

பெருங்கட்டுக் கொடி இலை அரை எலுமிச்சை அளவு அரைத்து எருமைத் தயிருடன் கொடுக்க பெரும்பாடு தீரும்.

இலையுடன் மாம்பருப்பும் சமன் அரைத்து பால், சர்கரை சேர்த்து காலை, மாலை கொடுக்க பேதி தீரும். கஞ்சி ஆகாரம் மட்டும் கொடுக்கவும்.

சிறுதளவு வேரும், ஒரு துண்டு சுக்கு, 4 மிளகுடன் காய்ச்சிக் கொடுக்க வாதவலி, வாத நோய், கீல் நோய் தீரும்.

இலைச்சாற்றை சர்கரை கலந்து நீரில் வைத்து வைக்க சிறிது நேரத்தில் கட்டியாகும். இதை அதிகாலையில் சாப்பிட்டுவர வெள்ளை, வெட்டை, சீதக் கழிச்சல் ஆகியவை தீரும்.

கட்டுக்கொடி வேரையும், கழற்சிப் பருப்பையும் இழைத்து விழுதாக்கிக் கலந்து அரை தேக்கரண்டி நீரில் கலந்து கொடுக்கக் குழந்தைகளுக்குக் காணும் வயிற்றுவலி தீரும்.

கென்யாவில் இதன் இலையை வயிற்று வலிக்குப் பயன் படுத்துகிறார்கள். பாக்கிஸ்தானிலும் இந்தியாவிலும் நரம்புத் தழர்ச்சிக்காகப் பயன் படுத்துகிறார்கள் சைனாவில் வேரை உடல் பருமனைக் குறைக்கப் பயன் படுத்துகிறார்கள். ராஜஸ்த்தானில் இலையை சமைத்து மாலைக்கண் உண்டாவதைக் குணப்படுத்துகிறார்கள். இதன் இரு கொடிகளையும் பிலிப்பையின்ஸ் மற்றும் ஆப்பிரிக்காவில் கூடைகள் செய்யவும் பயன் படுத்திகிறார்கள். தமிழ் நாட்டில் இந்தக் கொடியை பிரமணை செய்வதற்கும், சிம்மாடு செயவதற்கும் பயன் படுத்துகிறார்கள்.

Spices for Weight Loss

கரண்ட் "கட்'டைப் பற்றிக் கவலையில்லை:

"சாதனையாளர்கள்"

கரண்ட் "கட்'டைப் பற்றிக் கவலையில்லை:

விவசாயம் செய்ய முடியாமல், அதை விட்டுவிட்டு வேறு தொழிலுக்குப் போகிற விவசாயிகள் இந்தக் காலத்தில் அதிகம்.

ஆனால் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த ஒருவர், விவசாயத்தில் உள்ள ஆர்வம் காரணமாக, தனது வேலையை விட்டுவிட்டு விவசாயத்தில் இறங்கிவிட்டார் என்றால் ஆச்சரியமாகத்தான் இருக்கிறது. அதுவும் தனது தோட்டத்துக்குத் தேவையான மின்சாரத்தை சூரிய ஒளியின் மூலம் தயாரித்துக் கொள்கிறார் என்றால் வியப்பு இன்னும் அதிகமாகிறது.
கோவை கே.ஜி.சாவடி அருகே உள்ள முருகன்பதி என்ற கிராமத்தில் தனது தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்த விவசாயி ஆர். விஜயகுமாரிடம் பேசினோம்.

""நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் கலங்கல் கிராமம். புகழ்மிக்க விஞ்ஞானி ஜி.டி.நாயுடு எங்கள் ஊர்க்காரர்தான். எங்கள் குடும்பம் பழமையான விவசாயக் குடும்பம். எனவே விவசாயத்தில் இயல்பாகவே எனக்கு ஆர்வம் இருந்தது. ஆனால் என் அப்பாவுக்கு நான் இன்ஜினியராக வேண்டும் என்று ஆசை.
நான் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடித்துவிட்டு ராமகிருஷ்ணா ஸ்டீல் இன்டஸ்ட்ரி என்ற நிறுவனத்திலும் லக்ஷ்மி மிஷின் வொர்க்ஸ் நிறுவனத்திலும் வேலை செய்தேன். என்றாலும் எனது மனம் என்னவோ விவசாயத்திலேயே இருந்தது.

எனது சொந்த ஊரான கலங்கலில் உள்ள நிலத்தில் விவசாயம் செய்யலாம் என்று நினைத்தேன். ஆனால் அங்கே தண்ணீர் தட்டுப்பாடு இருந்தது. எனவே கலங்கலில் இருந்த நிலங்களை விற்றுவிட்டு, கே.ஜி.சாவடிக்கு அருகே உள்ள முருகன்பதி என்ற ஊரில் 15 ஏக்கர் தோட்டத்தை வாங்கினேன். என்னுடைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர விவசாயியாக மாறினேன்.
600 தென்னை மரங்களையும், 300 எலுமிச்சை மரங்களையும் எனது தோட்டத்தில் வளர்க்கிறேன். மாட்டுத் தீவனமான புல்லையும் பயிர் செய்கிறேன். இந்தப் பகுதியில் தண்ணீருக்குக் குறைவில்லை. ஆனால், ஒருநாளைக்கு ஒன்றரை மணி நேரம்தான் மின்சாரம் கிடைக்கிறது. இந்த மின்சாரத்தை வைத்து எப்படி இவ்வளவு மரங்களையும் காப்பாற்றுவது? நினைக்கவே பயமாக இருந்தது.

ஜெனரேட்டர் ஒன்று வாங்கலாம் என்று நினைத்தேன். ஆனால் ஜெனரேட்டர் மூலமாக 1 யூனிட் மின்சாரத்துக்கு ரூ.22 வரை செலவாகிறது என்பதைத் தெரிந்து கொண்டேன். அவ்வளவு செலவு செய்து தோட்டத்துக்குத் தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்தால் இழப்புதான் ஏற்படும். அதைவிட சும்மா இருக்கலாம்.
அப்போதுதான் சூரிய ஒளி சக்தியின் மூலமாக, மின்சாரத்தைத் தயாரித்துப் பயன்படுத்தினால் என்ன? என்று தோன்றியது. யூபிவி சோலார் கம்பெனி என்ற நிறுவனத்தில் 5040 வாட்ஸ் சோலார் பேனலை வாங்கினேன். இதற்கு 5.5 லட்சம் செலவானது. ஆனால் இந்த சோலார் பேனல், 25 வருடங்களுக்கும் மேல் உழைக்கும் என்பதால் இந்தச் செலவைப் பற்றி நான் கவலைப்படவில்லை. இதிலிருந்து 870 வோல்ட் டிசி மின்சாரம் அல்லது 415 வோல்ட் ஏசி மின்சாரம் கிடைக்கும். 3 பேஸிலும் கரண்ட் வரும். மின்னழுத்தம் சீராக இருக்கும். இதனால் மோட்டார் எரிந்து போய்விடும் என்று பயப்படத் தேவையில்லை.
இப்போது காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை எங்கள் தோட்டத்தில் நீர் இறைக்கும் மோட்டார் வேலை செய்கிறது. உச்சி வெயிலில் அதிகமாகத் தண்ணீர் வரும். நான் சொட்டு நீர்ப் பாசன முறையில் மரங்களுக்குத் தண்ணீர் பாய்ச்சுகிறேன். இப்போது கரண்ட் பில் கட்டத் தேவையில்லை. கரண்ட் கட் ஆகிவிடும் என்ற பயமுமில்லை; கவலையுமில்லை.

சோலார் பேனல் வாங்கினால் மத்திய அரசு 30 சதவிகிதம் மானியம் தருகிறது என்று கேள்விப்பட்டு "மினிஸ்ட்ரி ஆஃப் நியூ அன்ட் ரினிவபிள் எனர்ஜி' துறையை அணுகினேன். அவர்கள் "தமிழ்நாடு எனர்ஜி டெவலப்மென்ட் அசோசியேஷன்' மூலமாகப் பெற்றுக் கொள்ளச் சொன்னார்கள். அவர்களிடம் கேட்டால், அவர்கள் குறிப்பிடும் சோலார் பேனல்களை வாங்கினால் மட்டும்தான் மானியம் என்றார்கள். நான் தொடர்ந்து முயற்சிக்கவில்லை.
மின்சாரப் பற்றாக்குறை அதிகமாக உள்ள இந்நாளில், சூரிய ஒளி மூலம் மின்சாரத்தைத் தயாரிப்பது மிகவும் நல்லது. சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு இல்லாதது. ஆனால் சோலார் பேனல்களின் விலை அதிகமாக இருப்பதால் எல்லா விவசாயிகளும் வாங்கத் தயங்குவார்கள். விவசாயிகள் சூரிய ஒளி மின்சாரத்துக்கு மாற அரசு உதவி செய்ய வேண்டும்'' என்கிறார் ஆர்.விஜயகுமார்.

"சாதனையாளர்கள்"

"சாதனையாளர்கள்"

காது கேளாதவர்களும் செல்போனை பயன்படுத்துவதற்கான கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள் புதுக்கோட்டை மாணவர்கள்...

காது கேளாதவர்களும் இனி செல்போனில் பேசலாம். அதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்துள்ளார்கள், புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள செந்தூரான் பொறியியல் கல்லூரி மாணவர்களான சிவனேஷ், வேலரசன் மற்றும் செல்வராஜ் ஆகியோர். இவர்கள் பொறியியல், எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் இறுதி ஆண்டு பயில்கிறார்கள். மூவரும் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தங்கள் படிப்பின் இறுதி ஆண்டு புராஜெக்ட்டாக இவர்கள் கண்டறிந்துள்ள இந்தக் கருவி மூலம் மறுமுனையில் பேசுபவரின் பேச்சைத் துல்லிய மாக உணர முடிவதோடல்லாமல், நம்மைப் போலவே காது கேளாதவர் கள் பொழுதுபோக்காகப் பாடல்களைக் கேட்டும் ரசிக்கமுடியும்.

ஹெட்போன் போன்று இருக்கும் இந்தக் கருவியில் பிரத்யேகமாக இணைக்கப்பட்டிருக்கும் மோட்டாரில்தான் இருக்கிறது சங்கதி. ஹெட்போனை மொபைலுடன் இணைத்துப் பேசும்போது மோட்டாரின் அதிர்வினைப் பயன்படுத்தி மறுமுனையில் பேசுபவரின் பேச்சைக் கேட்க முடியும் என்பதே இதன் செயல்பாடு.

"பொதுவாகவே மூக்கு, தொண்டை, காது போன்றவை ஒரே நரம்பால் பிணைக்கப்பட்டிருக்கின்றன. இதனால், இவை எல்லாவற்றையும் இணைக்கும் பாலமான பல் இதற்கு உதவி செய்கிறது. ஹெட்போனில் இருக்கும் நீண்ட குச்சி போன்ற அமைப்பு பேசும்போது, தொடர்ந்து பல்லில் பட்டு அதிர்வினை ஏற்படுத்தி காது கேட்பவர்கள் கேட்க உதவி செய்கிறது. இந்தத் தொழில்நுட்பத்தால் பேசுவதைக் கேட்பதோடல் லாமல் பாடலையும் கேட்க முடியும்" என்று சிவனேஷ் தங்கள் கருவியின் செயல்பாட்டைப் பற்றி சாதாரணமாகச் சொல்லிவிட்டாலும் கருவியைக் கண்டுபிடிக்கவே 2,500 ரூபாய் செலவு செய்திருக்கிறார்கள்.

பேட்டரி மூலம் இயங்கும் இந்தக் கருவியை எந்த செல்போனோடு வேண்டுமானாலும் இணைத்துப் பயன்படுத்த முடியும். தற்பொழுது பேடண்ட் வாங்க முயற்சித்து வருகிறார்கள். அது கிடைத்து, தொழிற் சாலையில் தயாரிக்கத் துவங்கி விட்டால் குறைவான விலைக்கே வழங்க முடியும் என்கிறார்கள்.

இவர்களின் செயலை பாராட்டுவோம்...!

Monday, December 3, 2012

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : சூரியனுக்கு அருகில் சுற்றும் புதன் கோள் துருவங்களில் பேரளவு நீர்ப்பனி சேமிப்பு

பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் : சூரியனுக்கு அருகில் சுற்றும் புதன் கோள் துருவங்களில் பேரளவு நீர்ப்பனி சேமிப்பு

Water ice Discovery by NASA Probe
(NASA’s Messenger Space Probe Finds Large Ice Deposits in Mercury’s Polar Regions)   
[கட்டுரை : 90]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
பரிதியை மிக நெருங்கி அனலில் சுற்றும்
சிறிய அகக்கோள் புதக்கோள் !
நாசா முதலில் அனுப்பிய மாரினர்
விண்ணுளவி
புதன் கோளைச் சுற்றி வந்து
ஒரு புறத்தை ஆராயும் !
நாசாவின் இரண்டாம்
விண்ணுளவி மெஸ்ஸெஞ்சர்
புதன் கோளை
இரு புறமும் சுற்றி
முழுத் தகவல் அனுப்புகிறது
இப்போது.
பரிதி சுட்டுப் பொசுக்கும்
கரிக்கோள் சிறிய புதக் கோள் !
பாறைக் குழி மேடுகள்
பற்பல நிரம்பியது !
உட்கரு உருகித் திரண்டு
உறைந்து போன
ஒரு பெரும் இரும்புக் குண்டு !
வெப்பமும் குளிரும்
மாறி மாறிப் பாதிக்கும்
பாறைக் கோள் !
ஜிலேபி இடுவது போல் புதன்
பரிதியைச் சுற்றி வரும் !
துருவப் பகுதிகளில்
பெரும் பனிப் பாறை இருப்பதைக்
கண்டுபிடித் துள்ளது
விண்ணுளவி !
+++++++++++++
Water ice Discovery in Mercury
சூரிய மண்டலத்திலே பரிதியை மிக நெருங்கிச் சுற்றும் புதன் கோள் வழக்கப்படிச் சொல்லப் போனால் சொற்ப அளவில்தான் இதுவரை ஆராயப் பட்டுள்ளது.    புதன் கோள் தளத்தில் எல்லாக் கோள்களையும் விட மித மிஞ்சிய வெப்ப நிலை நிலவி வருகிறது.   துருவப் பகுதியில் உள்ள ஒற்றை ஆழக் குழியில் [Crater] அனல் அடுப்பு போல் 260 C [500 F]  உஷ்ணம் நிலை கொதிக்கும் போது, அண்டை விளிம்பு குளிர்ந்து போய், நீர் வெள்ளத்தைப் பனியாக்கிப் பல பில்லியன் ஆண்டுகளாகச் சேமித்திருக்கிறது.
இவ்வித இயற்கையான குளிராக்கிகள் [Natural Freezers] பரிதி ஒளி படாத மங்கலான துருவக் குழிகளின் விளிம்பு நிழல் பகுதிகளில் நிலைத்துள்ளன.   இந்த நீர்ப்பனிப் பாறைகளை புதன் கோளை விடக் கருத்த ஏதோ ஒருவிதத்தில் தோன்றிய ஆர்கானிக் கவசம் ஒன்று மூடி நீர்ப்பனி உருகாமல் பாதுகாத்து வருகிறது.   புதன் தளத்தின் சில பகுதிகள் மிகவும் சூடாகி நீர்ப்பனி உண்டாக வில்லை ஆயினும், பூமியில் உள்ள ரேடார்கள் இப்பகுதிகளிலிருந்து எழும் ஒளிமிகுந்த பிரதிபலிப்புகள்  உள்ளதை முன்பே காட்டியுள்ளன.
டேவிட் பெய்ஜ்  [University of California LA, Professional Ice Finder & Lead Author of the Science Paper] [November 29, 2012]

“பரிதிக்கு மிக நெருங்கிய புதன் கோளை நோக்கிச் சென்ற நாசா விண்ணுளவி சிறிய பாறை அண்டத்தை அண்டிச் சுற்றும் முன்பே முக்கியத் தகவல் பலவற்றை அனுப்பி யுள்ளது.  இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் நினைத்திருந்தது போல் இப்போது இல்லை புதன் கோள்.  மெஸ்ஸெஞ்சர் விண்ணுளவி பெருங்குழிப் பீடங்களையும், கடந்த கால எரிமலைத் தடங்களையும் வியப்பூட்டும் காட்சிகளாய்க் காட்டியுள்ளது.”
ஷான் சாலமன் (பிரதம ஆய்வாளர், நாசா மெஸ்ஸெஞ்சர் விண்ணுளவிக் குறிப்பணி) (ஆகஸ்டு 15, 2010)
“பரிதிக் கோளின் மிக நெருங்கிய அகக் கோளை ஆராயும் முயற்சியில் அப்பாலுள்ள மற்ற கனத்த கோள்களோடு மாறுபடும் வேறுபாடுகளை நாங்கள் அறிந்து கொள்வோம்.  குறிப்பாக அகக் கோள் புதனைத் தேடும் ஆராய்ச்சி யில் நமது புவிக்கோளைப் பற்றிப் புரிந்து கொள்ள வாய்ப்புள்ளது.”
ஷான் சாலமன் (பிரதம ஆய்வாளர், நாசா மெஸ்ஸெஞ்சர்)
“நாசாவின் முதல் விண்கப்பல் மாரினர் -10 போல் நான்கு அல்லது ஐந்து மாதங்களில் புதன் கோளை நாங்கள் விரைவில் நெருங்கிச் சுற்றியிருக்க முடியும்.  ஆனால் மாரினர் சென்ற அத்துணை வேகத்தில் நாங்கள் புதன் கோள் ஈர்ப்பு விசையில் மெஸ்ஸெஞ்சரை இறங்க வைத்துச் சுற்றி வர இயலாது.  புதன் கோளை நெருங்கும் போது மிக மெதுவாகச் சென்றால்தான் விண்ணுளவி புதன் ஈர்ப்பு விசையில் இறங்க (Spacecraft Orbital Insertion) ஏதுவாகும்.”
ஷான் சாலமன் (பிரதம ஆய்வாளர், நாசா மெஸ்ஸெஞ்சர்)

புதன் கோளில் நீர்ப்பனி பேரளவில் இருப்பது முதன்முதல் உறுதி செய்யப் பட்டுள்ளது
2012 நம்பர் 29 ஆம் தேதி “விஞ்ஞான இதழில்” [Science Journal] வெளியான நாசாவின்  மெஸ்ஸஞ்சர் விண்ணுளவியின் [NASA's Messenger Space Probe] மூன்று ஆராய்ச்சி வெளியீடுகளில் ஒன்று,  புதன் கோளில் நீர்ப்பனி இருப்பதாய் நிலவி வந்த ஐயப்பாட்டு நிலை மாறி, உறுதியாக உள்ளதென நிரூபிக்கப் பட்ட தகவலை அறிவித்தது.   பல்வேறு தனிப்பட்ட ஆதாரங்களிலிருந்து,  பரிதி அனல் அடிக்கும் புதன் கோளின் துருவப் பகுதிகளில் பேரளவு நீர்ப்பனிப் பாறைகள் இருப்பது தெரிய வருகிறது.  வட துருவப் பகுதிகளில் பரிதி கனல் தாக்காத நிழற் தளங்களில் நீர்ப்பனிகளைக் கருப்புப் படிவுகள் [Dark Deposits] மூடியுள்ளதாகக் காணப்படுகிறது.
காலிஃபோர்னியா பல்கலைக் கழக ஆய்வாளர்கள், நாசா விண்ணுளவி மெஸ்ஸெஞ்சர் அனுப்பிய தகவலைச் சேமித்து, சூரிய மண்டலத்தின் அகக் கோள் புதனின்  மித மிஞ்சியக் குளிர்த் தளங்களை முதன் முதல் வெப்ப நிலை மாடல் [Thermal Model of Mercury] மூலம் தயாரித்து, அந்த தரைகள் மேலோ அல்லது கீழோ நீர்ப்பனி காணப் படுவதைக் குறிப்பிட்டனர்.   அவர்கள் அவ்விதம் கண்ட கருமைப் படிவுகள் ஒருவித ஆர்கானிப் பொருட்கள் என்று கூறுகிறார்.  பல மில்லியன் ஆண்டுகளாய் நீர் செழித்த வால்மீன்களும், முரண் கோள்களும் [ Water-Rich Comets & Asteroids ]  பன்முறைத் தாக்கி, அவற்றி லிருந்து நீரும், ஆர்கானிக் பொருட்களும் விழுந்து படிந்திருக்க வேண்டும் என்று கருதப் படுகிறது.
Water ice Discovery -1
1990 ஆண்டு ஆரம்ப காலத்தில் பூமியில் உள்ள ரேடார் மூலம் ஆராய்ந்ததில் புதன் கோளின் துருவப் பகுதிகளில் வழக்கமின்றிப் பளபளப்பான ஒளிமிக்கப் பளிங்குகள் இருப்பதைக் கண்டு விஞ்ஞானிகள் பெரிதும் வியப்படைந்தனர்.   அவை ஒருவேளை நீர்ப் பளிங்காக இருக்கலாம் என்று ஐயுற்றனர்.   புதன் கோள் தளத்தில் எல்லாக் கோள்களையும் விட மித மிஞ்சிய வெப்ப நிலை நிலவி வருகிறது.   துருவப் பகுதியில் உள்ள ஒற்றை ஆழக் குழியில் [Crater] அனல் அடுப்பு போல் 260 C [500 F]  உஷ்ணம் நிலை கொதிக்கும் போது, அண்டை விளிம்பு குளிர்ந்து போய், நீர் வெள்ளத்தைப் பனியாக்கிப் பல பில்லியன் ஆண்டுகளாகச் சேமித்திருக்கிறது.
இவ்வித இயற்கையான குளிராக்கிகள் [Natural Freezers] பரிதி ஒளி படாத மங்கலான துருவக் குழிகளின் விளிம்பு நிழல் பகுதிகளில் நிலைத்துள்ளன.   இந்த நீர்ப்பனிப் பாறைகளை புதன் கோளை விடக் கருத்த ஏதோ ஒருவிதத்தில் தோன்றிய ஆர்கானிக் கவசம் ஒன்று மூடி, நீர்ப்பனி உருகாமல் பாதுகாத்து வருகிறது.   புதன் தளத்தின் சில பகுதிகள் மிகவும் சூடாகி நீர்ப்பனி உண்டாக வில்லை ஆயினும், பூமியில் உள்ள ரேடார்கள் இப்பகுதிகளிலிருந்து எழும் ஒளிமிகுந்த பிரதிபலிப்புகள்  உள்ளதை முன்பே காட்டியுள்ளன.
முதன்முதல் புதன் கோளை இருபுறமும் சுற்றிய நாசா விண்ணுளவி
2011 மார்ச் 17 ஆம் தேதி நாசாவின் விண்ணுளவி ‘மெஸ்ஸெஞ்சர்’ ஆறரை ஆண்டுகள் பயணம் செய்து பரிதியை மிக நெருங்கிச் சுற்றி வரும் புதனை நீள்வட்டத்தில் வட்டமிட ஆரம்பித்தது.  பரிதிக் குடும்பத்திலே மிகச் சிறிய புதக்கோள் பரிதிக்கு மிக நெருங்கிச் சுற்றுவதால் தள உஷ்ணம் சூடேறி ஈயத்தைக் கூட உருக்கிவிடத் தீவிரம் உள்ளது. பரிதியின் அத்தகையக் கடும் வெப்பத்தைத் தாங்கிக் கொள்ள மெஸ்ஸெஞ்சர் விண்ணுளவிக்குப் போதிய வெப்பக் கவசம் இணைக்கப் பட்டுள்ளது.  மெஸ்ஸெஞ்சர் விண்ணுளவிதான் முதன்முதல் புதன் கோளை இருபுறமும் ஆராயச் சுற்றி வருகிறது.  1974-1975 இல் நாசா அனுப்பிய மாரினர் -10 (Mariner -10) விண்கப்பல் வெள்ளிக் கோளைச் சுற்றிப் பிறகு புதக் கோளையும் ஒருபுறம் சுற்றிப் படம் எடுத்து விபரங்க ளையும் பூமிக்கு அனுப்பியது.  தற்போது இருபுறமும் சுற்றி வரும் மெஸ்ஸெஞ்சர் ஏழாண்டுக்கு முன்பு 2004 ஆகஸ்டு 3 ஆம் தேதி அமெரிக்காவின் பிளாரிடா கெனாவரல் ஏவு முனையிலிருந்து ஏவப்பட்டது.  மெஸ்ஸெஞ்சர் புதனை மிகவும் நெருங்கி 200 கி.மீ (124 மைல்) உயரத்தில் சுற்றப் போவதாகத் திட்டமிடப் பட்டுள்ளது.  விண்ணுளவியின் சுற்று நீள்வட்டக் குற்றாரம் : 200 கி.மீடர் (124 மைல்), நீளாரம் : 15,000 கி.மீடர் (9000 மைல்).
மெஸ்ஸெஞ்சர் (MESSENGER) என்பதின் விரிவான விளக்கம் புதக்கோள் மேற்தளம், சூழ்வெளி, பூதளவியல் தொகுப்பு (MErcury Surface Space ENvironment GEochemistry & Ranging) என்ப தாகும்.  நாசா விண்ணுளவியின் நிறை : 485 கி.கிராம் (1070 பவுண்டு).  446 மில்லியன் டாலர் மதிப்புள்ள விண்ணுளவி யின் பரிமாணம் : (1.85 மீடர் உயரம், 1.42 மீடர் அகலம், 1.27 மீடர் ஆழம்) (6 அடி உயரம், 4.5 அடி அகலம், 4 அடி ஆழம்).  விண்ணுளவி 608 கி.கிராம் (1340 பவுண்டு) எரிசக்தி திரவம், அழுத்தம் உண்டாகப் போதிய ஹீலியம் ஆகியவற்றைத் தூக்கிச் செல்லும் திறமுள்ளது.  திசை நோக்கி விண்ணுளவியைத் திருப்பு வதற்கு நான்கு பெரிய உந்து ராக்கெட்டு களும், நான்கு சிறிய உந்து ராக்கெட்டுகளும் இணைக்கப் பட்டுள்ளன.  புதக் கோளின் இராசாயனக் கலவைகள், பூதளவியல், காந்தவியல் பண்பாடுகளைத் துல்லியமாகப் பதிவு செய்ய மெஸ்ஸெஞ்சர் அனுப்பப் பட்டுள்ளது.  ஏவப்பட்ட பிறகு மெஸ்ஸெஞ்சர் விண்ணுளவி மூன்று முறை ஈர்ப்பு விசை வீச்சில் (ஜனவரி 2008 இல் பூமிச் சுற்று வீச்சு, அக்டோபர் 2008 இல் வெள்ளிக் கோள் சுற்று வீச்சு, செப்டம்பர் 2009 இல் புதக் கோள் சுற்று வீச்சு) உந்தப் பட்டு இறுதியில் வேகம் மிதமாக்கப் பட்டு 2011 மார்ச் 18 இல் புதக்கோள் ஈர்ப்பு விசையில் இழுக்கப் பட்டு அதை நீள்வட்டத்தில் சுற்ற ஆரம்பித்தது.  புதன் கோளை மெஸ்ஸெஞ்சர் குறைந்தது ஓராண்டுக்கு 730 முறை சுற்றிவந்து பூமிக்குத் தகவல் அனுப்பும்.  எரிசக்தி திரவம் விண்ணுளவி ஓராண்டுக்கு மேல் பணி புரிய போதிய அளவு உள்ளது.
மெஸ்ஸெஞ்சர் விண்ணுளவி ஏவியதின் முக்கியக் குறிப்பணிகள்
புதன் கோள் நமது நிலவை விடச் சிறிது பெரியது.  அதன் விட்டம் : 4800 கி.மீடர் (2980 மைல்).  அதன் உட்கரு உருகி உறைந்து போன ஒரு பெரும் இரும்புக் குண்டு.  பூமியைப் போல் வாயு மண்டலம் இல்லாத புதக் கோளில் புலப்படாத ஒரு மெல்லிய வாயுச் சூழ்வெளி (Exosphere) சுற்றியுள்ளது.  அந்த அரங்கில் பரிதியிலிருந்து வெளி யேறும் அணுக்களும், அயான்களும் உலவி வருகின்றன.  புதன் தளத்திலிருந்தும் இராசாயன மூலகங் களும் உதறப்பட்டு எழுகின்றன.  சோடியம், பொட்டாசியம் போன்ற கன மூலகங்கள் புதன் மேற்தளத்தின் அருகே தவழ்கின்றன.  அவற்றைப் பரிதியின் ஒளித்துகள்கள் (Solar Photons) விண்வெளிக்குத் தள்ளுகின்றன.
1.  புதக் கோளின் தளப் பொருட்களைத் (Surface Composition) துல்லியமாக அறிவது.
2.  புதக் கோளின் பூதளவியல் வரலாற்றை (Geological History) வரையறை செய்வது.
3.  புதக் கோளின் காந்தக் களத்தின் துல்லிய பலத்தையும் (Precise Strength of the Magnetic Field) அது தள உயரத்தின் ஏற்ற இறக்கத்தினால் மாறுவதையும் அறிவது.
4.  புதக் கோளின் திசைப் பிறழ்ச்சியை (Mercury’s Libration) அளந்து உட்கருவின் திரவ வெளிக்கரு இருப்பை அறிவதற்கு ஆராய்ச்சி செய்வது.
5.  புதக் கோள் துருவங்களில் உள்ள வானலை எதிரொலிப்பு பொருட்களின் (Radar Reflective Materials) பண்பாடுகளைத் தீர்மானிப்பது.
6.  ஆவியாகும் முக்கிய கனிமங்களையும் (Volatile Species) அவற்றின் மூலச் சுரப்பிகளையும், படிவுகளையும் புதக்கோள் வாயுச் சூழ்வெளியில் (Exosphere) இருப்பதை ஆராய்வது.
பரிதிக்கு அருகில் கடும் வெப்ப விண்வெளியில் சுற்றி வரும் புதன் கோள்!
ரோமானியக் கடவுளின் தூதர் மெர்குரி [Mercury, Messenger of God] பெயரைக் கொண்டு முதற்கோள் புதனின் பெயர் மெர்குரி [Mercury] என்று வைக்கப் பட்டது. 17 ஆம் நூற்றாண்டில் பிறை வெள்ளியை [Venus] முதலில் கண்ட இத்தாலிய வானியல் மேதை காலிலியோ, புதனும் அவ்வாறே பிறை வடிவில் இருப்பதைத் தொலை நோக்கியில் பார்த்து, இரண்டும் பரிதியைச் சுற்றி வருகின்றனவா என்று ஆராய்ந்தார். அதை உறுதிப் படுத்த புதன், வெள்ளி ஆகியவற்றின் பிறைகளைத் தொடர்ந்து பதிவு செய்து, பூமியின் நிலவைப் போல் பாதி நகர்ச்சியில் பிறை பெரிதாவதையும், அடுத்த பாதி நகர்ச்சியில் பிறை சிறிதாவதையும் கண்டு பிடித்து, புதன் வெள்ளி இரண்டும் பரிதியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன என்று நிரூபித்துக் காட்டினார். சூரியனும் மற்ற கோள்களும் பூமியை மையமாகக் கொண்டு சுற்றி வருகின்றன என்று கூறிய, கிரேக்க ஞானிகள் அரிஸ்டாடில் [Aristotle] டாலமி [Ptolemy] ஆகியோரின் கொள்கை பிழையான தென்று எடுத்துக் காட்ட, காலிலியோவுக்கு வெள்ளி புதன் ஆகிய கோள்களின் பிறை வளர்ச்சியும், பிறைத் தளர்ச்சியும் சான்றாய் அமைந்தன!
பூமியிலிருந்து தொலை நோக்கி மூலம் பார்த்தால், சூரிய உதயத்திற்கு ஒன்றை மணி நேரத்திற்குப் முன்பு எழுந்து, சூரிய மறைவுக்கு ஒன்றை மணி நேரத்திற்குப் பின்பு புதன் தெரியாமல் போகிறது. சுக்கிரனும் காலையில் அதுபோல் விடி வெள்ளியாகவும், மாலையில் அந்தி வெள்ளியாகவும் ஒளி வீசுகிறது! காலை நேரத்தில் பரிதிக்குக் கிழக்குக் கோடித் திசையில் [Greatest Eastern Elongation], அடுத்து மாலை நேரத்தில் மேற்குக் கோடித் திசையில் [Greatest Western Elongation] மட்டுமே புதனைக் காண முடியும். அதாவது, புதன் கோளைப் பூமியி லிருந்து 28 டிகிரி கோணத்தில் பரிதிக்கு இருபுறமும் காண முடியுமே தவிர, மற்ற வீதி நகர்ச்சியில் அது சூரியனின் பேரொளி வெள்ளத்தில் மூழ்கிப் போகிறது.
சுக்கிரனைப் [Venus] போல், புதனுக்கும் துணைக் கோள் எதுவும் இல்லை. சூரிய மண்டலத்தில் மற்ற எல்லாக் கோள்களுக்கும் [பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன், புளுடோ] ஒன்று அல்லது மேற்பட்ட துணைக் கோள்கள் உள்ளன! கரடு முரடான துளைகள் நிறைந்த கரும் பாறை களைப் புதன் கொண்டிருப்பதால், அது பரிதியின் ஒளியை எதிரொ ளிக்கும் திறம் [Albedo = 0.06] மிகவும் குறைந்தது. பூமியைப் போல் பாதுகாப்பு வாயு மண்டலம் எதுவும் புதனில் இல்லாததால், சூரியனின் உக்கிர வெப்பம் முழுவதும் அதன் வரண்ட குழிகளையும், உச்சி மலைகளையும் சுட்டுக் கரிய வைக்கிறது.

பரிதி குடும்பத்தின் முதற்கோள் புதனின் தனிச்சிறப்புப் பண்பாடுகள்
உருவத்தில் பூமிக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட ஓர் வடிவைப் பெற்றது புதன். அதன் விட்டம் 3030 மைல். சந்திரனைப் போல் புதனும் கரடு முரடான குழிகள் [Craters] நிறைந்து, வாயு மண்டலம் எதுவும் இல்லாத ஏறக் குறைய சூன்யமான [Vacuum] சூழ்நிலையைக் கொண்டது.  புதன் சுக்கிரனைப் [Venus] போல் மித மிஞ்சிய சூடான [480 டிகிரி C] கோளாக இல்லா விட்டாலும், உஷ்ணம் அதிக அளவில் -180 டிகிரி C முதல் +430 டிகிரி C வரை ஏறி இறங்கி, கடும் வெப்பமும் குளிரும் ஊஞ்சல் ஆடும் ஒரு கோள். அதன் ஈர்ப்புச் சக்தி மிகவும் வலிமை அற்றது! பூமியின் ஈர்ப்பு விசை 1 என்று வைத்துக் கொண்டால், புதனின் ஈர்ப்பு விசை 0.38 தசம அளவு! அதாவது பூமியில் 100 பவுண்டு எடையுள்ள ஒரு பண்டம், புதனில் 38 பவுண்டு எடைதான் காட்டும்!  சூரிய ஒளிமயத்தில் பரிதியை மிகவும் நெருங்கிச் சுற்றி வருவதால், புதனைத் தொலை நோக்கி மூலம் காண்பது, மிகவும் கடினம். பரிதிக்குச் சுமார் 28 மில்லியன் மைல் தூரத்தில் நீள்வட்ட வீதியில் [Elliptical Orbit] 88 நாட்களுக்கு ஒரு முறைப் பரிதியைச் சுற்றி வருகிறது.
நாம் வாழும் பூமி பரிதிக்கு அப்பால் 93 மில்லியன் மைல் தூரத்தில் உள்ளது! எல்லாக் கோள்களையும் விடப் பரிதியை வெகு விரைவில், மணிக்கு 100,000 மைல் வேகத்தில் சுற்றி வருகிறது, புதன்! வானலைத் தட்டு [Radar] மூலம் புதனின் கதிரலைகளை ஆராய்ந்ததில், அது தன்னைத் தானே 59 நாட்களில் சுற்றிக் கொள்வது அறியப் பட்டது. பூமிக்கும் பரிதிக்கும் இடையே சுற்றி வரும் சுக்கிரன், சந்திரனைப் போன்று, புதனும் அதனுடைய 88 நாள் பயணத்தில், சூரிய ஒளியில் பிறை வடிவைக் [Crescent Phases] காட்டி, பிறை வளர்ச்சியும், பிறைத் தளர்ச்சியும் பெற்று வருகிறது.  ஒளிநிறப் பட்டை ஆய்வில் [Spectroscopic Analysis] புதன் கோளத்தில் மிகவும் நலிந்த சூழக [Atmosphere] மண்டலமும், அதில் சோடியம், பொட்டாசியம் இருப்பதாக அறியப் பட்டது. அவற்றின் அணுக்கள் தரைப் பரப்பிலிருந்துதான் கிளம்பி யிருக்க வேண்டும்.
ஒரு நூற்றாண்டில் 15 தடவை புதன், பூமிக்கும் பரிதிக்கும் இடையே குறுக்கீடு [Transit] செய்கிறது.  அப்பொது பூமி, புதன், பரிதி மூன்றும் ஒரே நேர் கோட்டில் அமையும்!  அந்தச் சமயத்தில் புதன் கோள் ஒரு கரும் புள்ளியாக, பிரம்மாண்டமான பரிதியின் வட்ட முகத்தில் பொட்டு போல் தெரிகிறது. 1677 இல் முதல் புதன் குறுக்கீடு காணப்பட்டுப் பதிவாகி யுள்ளது. அதற்குப் பின்பு இதுவரை 44 புதன் குறுக்கீடுகள் தொடர்ந்து காணப்பட்டுப் பதிவாகி ஆராயப் பட்டுள்ளன. நாசா புதனுக்கு முதலில் ஏவிய விண்கப்பல் மாரினர்-10 நாசா 1973 ஆம் ஆண்டு நவம்பர் 3 ஆம் தேதி ஏவிய, விண்வெளிக் கப்பல் மாரினர்-10 [Mariner-10] சுக்கிரனை [Venus] முதலில் ஆராய்ந்து படமெடுத்து, அடுத்து 1974 பிப்ரவரி 5 ஆம் தேதி புதன் கோளை நெருங்கி 197 மைல் அருகே பறந்து ஒரு புறத்தை மட்டும் படமெடுத்தது.  நாசா சுக்கிரனின் ஈர்ப்பு சக்தியைப் பயன்படுத்தி, விண் கப்பலின் போக்கைக் கட்டுப் படுத்தி, புதனைக் குறிவைத்தது.

அம்முயற்சி வெற்றி அடைந்து, ஆறு மாத இடை வெளிகளில் அடுத்து, அடுத்து மாரினர்-10 மூன்று முறைப் புதனைக் கடந்து, தொடர்ந்து புதுப் புது விபரங்களைப் பூமிக்கு அனுப்பியது. மாரினர்-10 புதனின் தளப் பகுதிகளை முதன் முதல் படமெடுத்து அனுப்பவும், எதிர்பாராதவாறு ஒரு பெரும் காந்தக் களத்தைக் கண்டு பிடிக்கவும் ஏதுவானது. புத மண்டலம் காந்த சக்தி கொண்டுள்ளதற்கு, அதன் உட்கருவில் இரும்புக் கோளம் இருக்க வேண்டும் என்று ஊகிக்கப் படுகிறது. பூமியின் சந்திரனைப் போல் மேல் தளத்தில் பாறைக் குழிகள் நிரம்பி இருந்தாலும், புதன் தனித்துவம் பெற்றுச் சிறிதளவு காந்த சக்தி கொண்டுள்ளது.  சந்திரனில் காந்த மண்டலமும் இல்லை! இரும்புள்ள உட்கருவும் இல்லை! புதன் தளத்தில் கோபுரம் போன்ற செங்குத்தான மலைகள், தாழ்ந்த பள்ளங்கள் ஏராளமாய் இருக்கின்றன. ஆனால் பூமியின் சந்திரனில் புதனைப் போல் செங்குத்தான மலைகள் இல்லை. புதன் கோளில் வாயு அழுத்தம் இல்லை! பிராணவாயு, நைடிரஜன் எதுவும் கிடையாது! நீரில்லை ! புதனும் பூமியின் நிலவைப் போலவே எந்த வித உயிரினமும் வாழ வழி இல்லாத ஓர் செத்த அண்டமே [Dead Planet]! செவ்வாய், சுக்கிரன் கோள்களைப் போல், புதனும் கடும் வெப்பம், குளிர்ச் சூழ்நிலை கொண்டு யாரையும் வரவேற்காத வரண்ட பாறை நிலமே! வாயு மண்டலத்தில் இம்மி யளவு ஆர்கான் [Argon], நியான் [Neon], ஹீலியம் [Helium] மிகச் சிறிய அழுத்தத்தில் சூழ்ந்துள்ளது! அப்பாறை நிலம் எங்கும் விண்கற்கள் விழுந்து விழுந்து பெருங் குழிகள் ஏற்பட்டுள்ளதை மாரினர்-10 எடுத்துக் காட்டியது.  மாரினர்-10 ஆய்வுச்சிமிழ் புதனின் காந்த சக்தி பூமியின் காந்த சக்தியில் நூற்றில் ஒரு பங்களவு இருப்பதாகக் கண்டது. புதன் பரிதியை இருமுறைச் சுற்றிவரும் காலத்திற்குள் [88 நாட்கள்], அது தன்னைத் தானே தன்னச்சில் மூன்று முறைச் சுழல்கிறது. 1991 இல் பூமியிலிருந்து மிகச் சக்தி வாய்ந்த வானலைத் தொலைநோக்கி [Radio Telescope] மூலம் பார்த்ததில் புதன் கோளின் துருவக் களங்களில் பனிக்கட்டி அடுக்குகள் மேவி இருப்பதைக் காட்டியது.  ஆனால் அந்தப் பகுதிகளில் மாரினர்-10 ஆய்வுச்சிமிழ், 1974 இல் பயணம் செய்ய முடியவில்லை!
பூமியின் வட துருவத்திற்கு மேல் உயரத்திலிருந்து பார்த்தால், சூரிய குடும்பத்தில் புளுடோவைத் தவிர, மற்ற எல்லாக் கோள்களும் [புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன்] ஏறக் குறைய ஒரே மட்ட வீதிகளில் எதிர்க்-கடிகார [Counter-Clockwise] சுழற்சியில் சூரியனைச் சீராய்ச் சுற்றி வருகின்றன. கடவுளின் மகத்தான படைப்புக்கு, பிரம்மாண்டமான பிரபஞ்ச அண்டங்களின் ஒழுங்கு இயக்க நியதி ஓர் அரிய எடுத்துக் காட்டு! 1973 இல் வெள்ளி, புதன் இரண்டு கோள்களை ஒரே பயணத்தில் ஆய்வு செய்த மாரினர்-10 இன் பொறி நுணுக்கப் போக்கைப் பயன்படுத்தி, நாசா [NASA] விஞ்ஞானிகள் அடுத்து ஒரே விண்வெளிப் பயணத்தில், பரிதியின் புற வெளியில் சுற்றி வரும் வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய நான்கு கோள்களை ஆராயும் திறமுடைய வாயேஜர்-2 [Voyager-2] ஆய்வுச்சிமிழைத் தயாரித்து 1977 ஆகஸ்டு 20 இல் அனுப்பி வெற்றி பெற்றது, ஒரு மாபெரும் விஞ்ஞானப் பொறியியல் சாதனை!  2014 ஆண்டில் ஈசாவும், ஜாக்ஸாவும் இணைந்து (ESA & JAXA) (European Space Agensy & Japanese Space Agency) புதன் கோளுக்கு விண்ணுளவி அனுப்பப் போவதாக அறியப் படுகிறது.
(தொடரும்)
+++++++++++++++++++++++
தகவல் :
Picture Credit : NASA,
1.  National Geographic Picture Atlas of Our Universe (1986)
2.  Astronomy Today Chaisson & McMillan (1999)
3.  Reader’s Digest – The Universe & How We See It  By : Giles Sparrow (2001)
4.  Universe By : Roger Freedman & William Kaifmann III (6th Edition) (2002)
5.  BBC News :  Messenger Spacecraft to Go Back to Mercury (June 11, 2001)
6.  BBC News : NASA Set to Revisit Mercury (July 16, 2004)
7.  NASA’s Messenger to Fly By Mercury During Retrograde (September 15, 2009)
8.   Spacecom- Whole New Mercury Promised By NASA Spacecraft (Messenger) (August 15, 2010)
9.   BBC News – Messenger Probe Enters Mercury Orbit By Jonathan Amos (March 17, 2011)
10.  Daily Galaxy : The Extreme Planet : Messenger Spacecraft Swings into Orbit Around (Planet) Mercury Today.  March 11, 2011
11. CU-Boulder Space Scientists Ready for Orbital Insertion 0f (Messenger), Mercury Spacecraft. (March 17, 2011)
12.  Wikipedia “Messenger” Spacecraft (August 9, 2011)
13.  Science Blog : http://scienceblog.com/58136/researchers-find-evidence-for-water-ice-deposits-and-organic-material-on-mercury/  [November 29, 2012]
14.  Large Ice Deposits Found on Planet Mercury Nearest the Sun [November 29, 2012]
15. Spacecraft Messenger Finds New Evidence for Water on the Plant Mercury [November 30, 2012]
++++++++++++++++++


S. Jayabarathan (jayabarat@tnt21.com) (December 1, 2012)

Saturday, December 1, 2012

10 Health Benefits of Eggs

10 Health Benefits of Eggs 




 



1. Eggs are great for the eyes. According to one study, an egg a day may prevent mascular degeneraton due to the carotenoid content, specifically lutein and zeaxanthin. Both nutrients are more readily available to our bodies from eggs than from other sources.



2. In another study, researchers found that people who eat eggs every day lower their risk of developing cataracts, also because of the lutein and zeaxanthin in eggs.



3. One egg contains 6 grams of high-quality protein and all 9 essential amino acids.



4. According to a study by the Harvard School of Public Health, there is no significant link between egg consumption and heart disease. In fact, according to one study, regular consumption of eggs may help prevent blood clots, stroke, and heart attacks.



5. They are a good source of choline. One egg yolk has about 300 micrograms of choline. Choline is an important nutrient that helps regulate the brain, nervous system, and cardiovascular system.



6. They contain the right kind of fat. One egg contains just 5 grams of fat and only 1.5 grams of that is saturated fat.



7. New research shows that, contrary to previous belief, moderate consumption of eggs does not have a negative impact on cholesterol. In fact, recent studies have shown that regular consumption of two eggs per day does not affect a person's lipid profile and may, in fact, improve it. Research suggests that it is saturated fat that raises cholesterol rather than dietary cholesterol.



8. Eggs are one of the only foods that contain naturally occurring vitamin D.



9. Eggs may prevent breast cancer. In one study, women who consumed at least 6 eggs per week lowered their risk of breast cancer by 44%.



10. Eggs promote healthy hair and nails because of their high sulphur content and wide array of vitamins and minerals. Many people find their hair growing faster after adding eggs to their diet, especially if they were previously deficient in foods containing sulphur or B12.